ஆப்நகரம்

குரு பெயர்ச்சி பலன் 2023: பூராடம் உத்திராடம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்

Uthradam Nakshatra Guru Peyarchi Palan : குரு பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு இன்று பெயர்ச்சியாகிறார். கன்னி ராசியில் இருக்கும் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்திற்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 22 Apr 2023, 6:09 pm
பூராடம் உத்திராடம் நட்சத்திரங்களுக்கு குரு பெயர்ச்சி பலன் எப்படி இருக்கும் என்பதை கோவை ஜோதிடர் ஆர். பால்ராஜ் (9894316587) அவர்கள் இங்கே கணித்துக் கூறியுள்ளார்.
Samayam Tamil pooraadam guru peyarchi


பூராடம் நட்சத்திர குரு பெயர்ச்சி பலன்: Pooradam Nakshatram Guru Peyarchi Palan
பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப்பெரிய வெற்றிகளை கொடுக்கப் போகின்றது. எற்கனவே ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து முழுமையாக வெளியே வந்தநிலையில் குடுபகலாவின் ஆசியும் கிடைக்கின்றது. இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும். திருமண நிகழ்வுகள், வீடுகட்டுதல், புதிய தொழில் தொடக்கம் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளில் ஆனந்தமடைவீர்கள் .

மாணவர்கள் தாங்கள் விரும்பியவாறு நல்ல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சோர்க்கை பெறுவீர்கள். பெண்கள் தாங்கள் விரும்பியவாறு ஆடம்பரான வாழ்க்கை அமையப் பெற்ற தங்கள் சமூகத்தினரால் போற்றப்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிறுவனங்களிலே மிகப்பெரிய பதவிகளில் அமர்த்தப்பட்டு இருமடங்கு சம்பள உயர்வு பெற்து மகிழ்வார்கள். சுயதொழில் செய்பவர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெற்று புதிய கிளைகள் திறக்கலாம்.கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகள் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் கிடைத்து அதன் மூலம் அங்கிகாரம் பெறுவார்கள்.

வெள்ளிக் கிழமைகளில் லட்சுமி நரசிங்கப்பெருமானை வணங்கி மேலும் நன்மைகளை அடையலாம்.

உத்திராடம் நட்சத்திர குரு பெயர்ச்சி பலன்: Uthradam Nakshatram Guru Peyarchi Palan
இந்த குருப்பெயர்ச்சியானது ஓரளவு நன்மை செய்வதாக இருந்தாலும் இந்த நட்சத்திரக் காரர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். தேவைக்கேற்ப பொருள் வரவு இருக்கும். ஆனாலும் ஆடம்பரப் பிரியர்களுக்கு பற்றாக்குறையே ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபச்செலவுகள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவார்கள்.

நல்ல மதிப்பெண் பெற்று நல்ல மேல்படிப்பை தொடருவார்கள். பெண்கள் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வர் . அதிக ஆசை பிரச்சனை களை உண்டாக்கும். வேலைக்கு செல்பவர்கள் மேலதிகாரிகளிடம் மோதல் போக்கை தவிர்க்க வேண்டும். சுய தொழில் செய்பவர்கள் அகலக்கால் வைக்க வேண்டாம். கலைத்துறையினர் தங்கள் திறமைக்கேற்ற வாய்ப்புக்களை பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
மேலும் நன்மைகளைப் பெறுவதற்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் நலக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வரவும்.
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்