ஆப்நகரம்

குரு பெயர்ச்சி பலன் 2023: உத்திரம், அஸ்தம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்

Hastham Nakshatram Guru Peyarchi Palan : குரு பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு இன்று பெயர்ச்சியாகிறார். கன்னி ராசியில் இருக்கும் உத்திரம், அஸ்தம் நட்சத்திரத்திற்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 22 Apr 2023, 12:06 pm
உத்திரம், அஸ்தம் நட்சத்திரங்களுக்கு குரு பெயர்ச்சி பலன் எப்படி இருக்கும் என்பதை கோவை ஜோதிடர் ஆர். பால்ராஜ் (9894316587) அவர்கள் இங்கே கணித்துக் கூறியுள்ளார்.
Samayam Tamil uthiram guru peyarchi


உத்திரம் நட்சத்திர குரு பெயர்ச்சி பலன்: Uthiram Nakshatram Guru Peyarchi Palan
இந்த குரு பெயர்ச்சி உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல பலன்களை தாமதப்படுத்துவதாக உள்ளது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தள்ளிப் போகலாம். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்குத் தாமதமாக அழைப்புக்கள் வரலாம். குரு தக்ஷிணாமூர்த்தி வழிபாட்டின் மூலம் தடங்கல்களை வெற்றி காணலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் பர்த்துககொள்ள வேண்டும்.

குரு பெயர்ச்சி 2023 : எந்த ராசிக்கு ராஜ வாழ்க்கை? நோய் தொற்று, விலையேற்றம் எப்படி இருக்கும்?

பெண்கள் தங்கள் வீட்டின் ரகசியங்களை மூன்றாம் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். புதிய நட்புகளை தர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் சகதொழிலாளர்களைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாபத்தில் குறைவிருக்காது. கலைத்துறையினர் புதிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி முன்னேற்றமடைவர்.
தட்சிணாமூர்த்தி வழிபாடும், சூரியன் வழிபாடும் தடைகளை விலக்கி நன்மைகளைக் கொடுக்கும்.

குரு பெயர்ச்சி 2023 பலன்கள்: 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள் - அதிர்ஷ்டம் யார் பக்கம்?
அஸ்தம் நட்சத்திர குரு பெயர்ச்சி பலன்: Hastham Nakshatram Guru Peyarchi Palan
ஏற்கனவே நிறைய சோதனைகளை சந்தித்து மெல்ல மெல்ல அதிலிருத்து விடுபட்டுக் கொண்டிருத நீங்கள், இனி எந்த சவால்களையும் எதிர்கொள்ளலாமென்னும் பக்குவத்தை அடைத்துள்ளீர்கள். இந்த குருப்பெயர்ச்சியானது உங்கள் முன்னேற்றத்திற்கு துணை நிற்கும். உங்கள் முயற்சிகள் வெற்றியடைய சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மாணவர்கள் நண்பர்கள் வட்டத்தை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தினால் முன்னேற்றத்தைக் காணலாம். பெண்கள் செல்வினங்களைக் குறைத்து சேமிப்பில் கலனம் செலுத்த வேண்டும். நாளைய தேவைகளுக்கு இன்றைய சேமிப்பு அவசியம் என்பதை உணர வேண்டும். உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகங்களில் உள்ள மேலதிகாரிகளைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். சுய தொழில் செய்பவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும். கலைத் துறையைச் சார்ந்தவர்கள் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சுய ஜாதகத்தின்படி நடைபெறும் தசாபுத்திகளுக்கு தக்கபடி கிரகப் பரிகாரம் செய்து நன்மையடையலாம்.

சனிக் சிழமை தோறும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மைகள் பெருகும்.
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்