ஆப்நகரம்

எப்போதும் ஓய்வில்லாமல், அமைதியற்றவர்களாக உணரும் 4 ராசிகள்

சிலரோ எப்போதும் ஓய்வில்லாமல், மன அமைதியற்றவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களின் வேலைகளில் சில சமயம் ஒருவித தடுமாற்றம் இருக்கும். இது போன்று எப்போதும் அமைதியற்ற மனநிலை கொண்ட 4 ராசியினர் யார், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 12 Oct 2021, 8:21 pm
சிலரோ எப்போதும் ஓய்வில்லாமல், மன அமைதியற்றவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களின் வேலைகளில் சில சமயம் ஒருவித தடுமாற்றம் இருக்கும். இது போன்று எப்போதும் அமைதியற்ற மனநிலை கொண்ட 4 ராசியினர் யார், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
Samayam Tamil leo virgo sagittarius pisces rasi always feel anxiety and restless mind
எப்போதும் ஓய்வில்லாமல், அமைதியற்றவர்களாக உணரும் 4 ராசிகள்


ஓய்வில்லாமல் இருக்கும் ராசிகள்

கடினமாக உழைக்கும் பலரும் கிடைக்கும் நேரத்தில் ஓய்வெடுத்துக் கொள்வது வழக்கம். எந்த ஒரு வேலை அல்லது அதில் ஈடுபாடு குறித்து கவலைப்படுவதில்லை. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து அல்லது படுத்துக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக உடல் கலைப்பை விட, மன கவலையும், ஓய்வின்மை அதிகமாக இருக்கும்.

ஆனால் சிலரோ எப்போதும் ஓய்வில்லாமல், மன அமைதியற்றவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களின் வேலைகளில் சில சமயம் ஒருவித தடுமாற்றம் இருக்கும். இது போன்று எப்போதும் அமைதியற்ற மனநிலை கொண்ட 4 ராசியினர் யார், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.


குரு பெயர்ச்சி 2021 அதிர்ஷ்ட பலன் பெறும் 6 ராசிகள் - உங்கள் ராசியும் இருக்கா தெரிந்து கொள்ளுங்கள்!

​சிம்மம்

நவகிரக தலைவரான சூரியன் ஆளக்கூடிய ஆளுமை குணம் நிறைந்த சிம்ம ராசியினர் தங்களுக்குள் உலகை கட்டுப்படுத்தக்கூடிய திறமை இருப்பதை உணர்ந்தவர்கள். அதுமட்டுமல்லாமல் ஓய்வெடுத்துக் கொண்டு, தன் காலத்தை வீணாக்க நினைக்காமல் எப்போதும் ஏதேனும் ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

இதனால் இவர்கள் பல சமயங்களில் மன அமைதியற்றவர்களாக உணர்கிறார்கள். இயற்கையால் பொறுமையற்றவர்கள்.

​கன்னி

கன்னி ராசிக்காரர்கள் ஒரு சிறந்த வேலைக்காரனாக இருப்பார்கள். இவர்களுக்கு நீண்ட நேரம் ஓய்வெடுக்கவோ அல்லது ஒரே இடத்தில் உட்காரவோ முடியாது. அவர்கள் ஏதாவது ஒறு செயல் அல்லது வேலையில் பிஸியாக இருக்க விரும்புவார்கள். செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்று எப்போதும் உணர்ந்து அதை செய்ய ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

யானை, குதிரை, பசுக்கள், கழுதை, பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?

​தனுசு

தனுசு ராசியினர் பொறுமையற்றவர்களாகவும், அமைதியற்றவர்களாகவும் இருக்கிறார்கள். எதற்கேனும் காத்திருக்கவோ அல்லது ஒரு செயலை செய்ய, அதன் முடிவை அறிய நினைப்பார்கள். பொறுமையாக ஓய்வெடுக்க அவர்களின் மனம் கேட்காது. இவர்களுக்கு ஏதேனும் ஒரு செயலை செய்யும் போது மட்டுமே மனம் அமைதியாக உணரும்.

நவகிரகங்களின் குணங்கள் என்ன? சாத்விகம், இராஜசம், தாமசம் எப்படிப்பட்ட பலன்கள் தரும்

​மீனம்

மீன ராசியினர் பெரும்பாலும் கலைப்பாக உணரமாட்டார்கள். அதனால் ஓய்வெடுக்க உட்கார நினைக்கமாட்டார்கள். எப்போதும் ஏதேனும் ஒரு விஷயம் குறித்து ஆராய்ந்து கொண்டே அல்லது அடுத்த செயல் குறித்த திட்டத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.

எதுவும் செய்யாமல், ஓய்வெடுப்போம் என்ற எண்ணத்தை வெறுக்கக்கூடியவர்கள். இவர்களிடம் அதிக கற்பனை இருக்கும்.


களத்திர தோஷம், புத்திர தோஷம், செவ்வாய் தோஷம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? - என்ன பதிப்பு உண்டாகும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்