ஆப்நகரம்

மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களை ஒதுக்க உண்மையான காரணம் தெரியுமா? -திருமண பொருத்தம் பகுதி 3

திருமணப் பொருத்தத்தின் போது எப்படி பொருத்தம் பார்க்க வேண்டும். சில நட்சத்திரங்களை பொருத்தம் பார்க்காமலேயே ஒதுக்குவது சரியா? தெரிந்து கொள்வோம்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 24 Feb 2023, 12:28 pm
திருமண பொருத்தம் பார்க்கும் போது எந்த வீட்டு அதிபதிகளை கண்டிப்பாக ஆராய வேண்டும். மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களை ஒதுக்க என்ன காரணம் உள்ளிட்ட விஷயங்களை ஜோதிட நிபுணர் ஆர். பால்ராஜ் (98943 16587) அவர்கள் விளக்கியுள்ளார்.
Samayam Tamil why we dont neglect moolam visakam kettai ayilyam nakshatra in thirumana porutham
மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களை ஒதுக்க உண்மையான காரணம் தெரியுமா? -திருமண பொருத்தம் பகுதி 3


திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டிய விஷயங்கள்

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது லக்கினத்திற்கு இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீடுகளைப் பற்றி ஆராய வேண்டும் என்பதனை சென்ற பகுதியில் பார்த்தோம். அதோடு குழந்தைப்பேறு பற்றிய விசயங்களை தெரிந்து கொள்வதற்கு ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டினையும் அதற்கான அதிபதியையும் அவர் பலமாக இருக்கின்றனரா என்பதனையும் ஆராய வேண்டும்.

திருமண பொருத்தம் : பத்து பொருத்தம் மட்டும் இருந்தால் போதுமா?

ஒதுக்கப்படும் சில நட்சத்திரங்கள்

சிலசமயம் நிறைய நட்சத்திரப் பொருத்தங்கள் இருக்கும். ஜாதகங்களில் குழந்தை பிறப்பது தாமதமாகிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். ஆராய்ந்து பார்த்தால் ஐந்தாம் வீட்டு அதிபதி நல்ல நிலையில் இருப்பதில்லை. இதுபோன்ற அமைப்புக்குத் தகுந்த பரிகாரங்களைச் செய்தும் கடவுளை மனதார வேண்டிக் கொள்வதன் மூலமும் பிள்ளை சொல்வங்களை அடையலாம். பரிகாரங்கள் மூலம் எல்லாம் சாத்தியமே.

அடுத்ததாக ஆராய்ந்தால் சில நட்சத்திரங்களை கண்மூடித்தனமாக நிராகரிக்கின்றனர். மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களைப் பார்த்த மாத்திரத்தில் விலக்கிவிடுகின்றனர். ஆனால் இந்த நான்டு நட்சத்திரங்களிலும் பிறந்த பெண்கள் எல்லா- வகையிலும் புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள்.

ரிஷப ராசியினர் எந்த ராசிக்காரரை திருமணம் செய்யலாம்

மூல நட்சத்திரம் எப்படிப்பட்டவர்கள்?

தேவகுரு என்று அழைக்கப்படும் குருபகவானுக்கு சொந்தமான வீடு தனுசு. தனுசு ராசியின் முதல் நட்சத்திரம் மூலம்.

மூல நட்சத்திரத்தின் அதிபதி கேது. எனவே தனுசில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் மிகுந்த மனோபலம் உள்ளவர்கள். எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு காண்பவர்கள். கேதுவை ஞானகாரகன் என்று கூறுவதற்கேற்ப ஆத்ம ஞானம் மிக்கவர்களாக இருப்பார்கள். தெய்வ நம்பிக்கை. கொண்டவர்களாக இருப்பார்கள். தெளிவான சிந்தனை உள்ளார்கள். நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள். தங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். உண்மையாக நடந்து கொள்வதுதான் இவர்களின் முக்கிய குணங்களில் ஒன்று. நண்பர்கள் உறவினர்கள் யாராக இருந்தாலும் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்.

திருமண பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும் தெரியுமா?

மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாதா?

இவ்வளவு நல்ல அம்சம் பொருத்திய மூல நட்சத்திரக்கர்களை திருமணம் என்று வந்து விட்டால் வேண்டாமென்று விலக்கி விடுகின்றனர்.


உண்மை என்னவென்றால் மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து கொண்டு வந்துவிட்டால், அவளுடைய நல்ல குண நலன்களைக் கண்டு மெச்சுகின்ற அந்த வீட்டின் எஜமானர் ஆகிய அந்த பெண்ணின் மாமனார், வீட்டின் பொறுப்புக்களை எல்லாம் மருமகள் கையில் ஒப்படைத்துவிட்டு சன்னியாசியைப் போல் வாழத் துவங்கிவிடுவர்.

மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா? - ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா?


இதைத்தான் மூல நட்சத்திரப் பெண் வீட்டிற்கு வந்தால் மாமனாருக்கு ஆகாது என்று குதர்க்கமாகக் கூறப்போய் சாஸ்திரங்கள் சொல்வதாகக் கதைகட்டி விட்டார்கள்.


ஜோதிட நிபுணர் ஆபால்ராஜ் 9894316587.


திருமண பொருத்தம் பகுதி 2
திருமண பொருத்தம் பகுதி 4
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்