ஆப்நகரம்

பட்ஜெட் : மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும்

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகையால் மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் என்று மோட்டார் வாகன தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

TOI Contributor 1 Feb 2017, 9:21 pm
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகையால் மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் என்று மோட்டார் வாகன தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil auto industry expects cut in personal income tax will help boost sales
பட்ஜெட் : மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும்


ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்வேறு அம்சங்கள் கொண்ட அந்த அறிக்கையில் தனிநபருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் என்பதில் மாற்றம் இல்லை. ஆனால், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் குறித்து நிஸ்ஸான் நிறுவன தலைவர் சிகார்டு கூறும் போது, " ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கான தனிநபர் வரி பாதியாக குறைக்கப்பட்டுள்ளதால் மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும்.

இந்த சலுகையின் மூலமாக முதல் முறையாக கார்களை வாங்குபவர்களும் , குறைந்த விலையிலான சிறய மோட்டர் வாகனங்கள் அதிகளவில் வாங்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளனர்." என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்