ஆப்நகரம்

20,000 யூனிட்டுக்கு அதிகமாக விற்பனை, 2.5 லட்சத்திற்கும் அதிகமான சர்வீஸ்- அசத்தும் ஹோண்டா..!

ஊரடங்கு நடைமுறையில் இருந்து லேசான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹோண்டா இருசக்கர வாகன விற்பனை அமோகமான வரவேற்பை பதிவு செய்து வருகிறது.

Samayam Tamil 16 May 2020, 9:47 pm
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 21 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டும், 2.5 லட்சம் இருசக்கரவாகனங்களுக்கு சர்வீஸ் பார்க்கப்பட்டும் இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முனைப்புடன் செயல்படும் ஹோண்டா நிறுவனம்
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முனைப்புடன் செயல்படும் ஹோண்டா நிறுவனம்


ஊரடங்கு உத்தரவில் இருந்து லேசான தளர்வுகள் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, வாகன விற்பனை மீண்டும் பழைய நிலையை எட்டி வருகிறது. குறிப்பாக உள்நாட்டு வாகன விற்பனை சிறப்பான நடைபெற்று வருவதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Read More: ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹிமாலயன் பைக்குகள் விலை அதிரடி உயர்வு..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் நோக்கில் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம், முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, நாடு முழுவதுமுள்ள அந்நிறுவனத்தின் 45 சதவீத டீலர்ஷிப்புகள் மற்றும் 30 சதவீத சர்வீஸ் மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள பாதுகாப்பு நடைமுறைகளின் படி ஹோண்டா நிறுவனம் தனது வர்த்தக்கத்தை துவங்கியுள்ளது. டீலர்ஷிப்புகள் மற்றும் சர்வீஸ் மையங்களில் பணியாற்றும் தனது ஊழியர்களிடம் முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்ற உத்தர்விட்டுள்ளது.

Read More: ரூ. 47,763 ஆரம்ப விலையில் Bajaj Platina 100 BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்..!

இந்நிலையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறை இயக்குநர் யாத்விந்தர் சிங் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். நாட்டில் நிலவும் அசாதாரண சூழலுக்கு ஏற்ப ஹோண்டா நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும், ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்ட லேசான தளர்வுகளுக்கு பிறகு, ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.

டீலர்ஷிப் மற்றும் சர்வீஸ் மையங்களில் பணியாற்றிடும் ஊழியர்கள் முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன. அங்கு வரவேற்பளிக்கும் வாடிக்கையாளர்களிடம் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

Read More: கொரோனாவால் விட்ட இடத்தை பிடிக்க சலுகைகளை வாரி வழங்கும் ராயல் என்ஃபீல்டு..!

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தள்ளுபடி விலை, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் இஎம்ஐ கடனுதவி பெறுவது உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஹோண்டாவின் பெரும்பாலான வாகனங்கள் ஆன்லைன் மூலமே புக் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி