ஆப்நகரம்

இந்தியாவில் விலை உயரும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள்- ஏன் தெரியுமா..?

உலகளவில் ஆடம்பர கார் தயாரிப்பில் முதன்மையான இடத்திலுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அடுத்தாண்டு முதல் தன்னுடைய பிரபலமான கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 13 Dec 2019, 11:04 am
மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் உதிரிபாகங்கள் விலை அதிகரிப்பு காரணமாக, அந்நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களுக்கும் 3 சதவீதம் வரை விலை அதிகரிக்கப்படவுள்ளது. இந்த புதிய விலை நிர்ணயம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.
Samayam Tamil அதிரடியாக விலை உயரும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள்
அதிரடியாக விலை உயரும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள்


இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மார்டின் ஸெச்வென்க், வணிகத்தை நிலைநாட்டும் பொருட்டே கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர, புதிய வழி இருப்பதாகவும் தெரியவில்லை.

உலகளவில் பல்வேறு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும், இந்த செக்மெண்டில் தொடர்ந்து வெற்றிக்கொடியை நிலைநாட்டும் நிறுவனமாக இருந்து வருவது மெர்சிடிஸ் பென்ஸ் தான். இதனாலேயே அந்நிறுவனத்திற்கு பல உதவி ப்ரோகிராம்கள் உள்ளன.

Read More: ரூ. 9.91 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Honda City BS6 பெட்ரோல் கார் அறிமுகம்..!

அவற்றில் ஸ்டார் ஃபைனான்ஸ், விஷ் பாக்ஸ், அகிலிட்டி பிளஸ் போன்றவை குறிப்பிடத்தகுந்த ப்ரோகிராம்கள் ஆகும். தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான ப்ரோகிரோம்களில் நல்ல வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

Read More: ரூ. 44.98 லட்சம் ஆரம்ப விலையில் புதிய (2020) Jaguar XE Facelift கார் அறிமுகம்..!

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், 15 ரெகுலரான கார்கள், 8 ஏஎம்ஜி கார்கள் மற்றும் ஒரேயொரு மேபக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. தேசியளவில் இந்நிறுவனத்திற்கு 95 அவுட்-லெட்டுகள் உள்ளன. நாட்டிலுள்ள அனைத்து முக்கியமான நகரங்களிலும் அவுட்-லெட்டுகள் இருக்கின்றன. இந்தியாவில் 1994ம் ஆண்டு கால்பதித்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அண்மையில் 25ம் ஆண்டு விழாவை கொண்டாடியது.

Read More: ரூ. 8.30 லட்சம் ஆரம்ப விலையில் Mahindra BS6 XUV300 கார் அறிமுகம்..!

நாட்டில் விற்பனையாகும் ஆடம்பர கார்களில் செடான், சலூன் மாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதில் ஆதிக்கம் செலுத்தும் பிராண்டாக இருப்பது மெர்சிடிஸ் நிறுவனம். எனினும், இதே பிரிவில் பிஎம்டபுள்யூ, ஆடி நிறுவனங்களுக்கு இடையிலும் கடும் போட்டி நிலவி வருகிறது.

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக வாகன விற்பனை சரிவின் போதும் கூட, மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு இப்பிரிவில் சிறப்பான வரவேற்பு இருந்து வந்தது. அது தற்போதும் தொடர்கிறது. விரைவில் புதிய தலைமுறை ஜிஎல்இ எஸ்யூவி கார் விற்பனைக்கு வரவுள்ளது. இக்காரை எதிர்நோக்கி நாடே ஆர்வமுடன் காத்திருக்கிறது.

அடுத்த செய்தி