ஆப்நகரம்

நெருக்கடியான இடத்தில் காரை லாவகமாக பார்க் செய்த இந்தியர்- அசந்துபோன ஆனந்த் மஹிந்திரா..!

மிகவும் நெருக்கடியான ஒரு காம்புவண்டுக்குள் ஃபோர்டு ஃபிகோ காரை லாவகமாக பார்க் செய்த ஓட்டுநரின் அறிவுக்கூர்மையை பாராட்டிஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 21 Feb 2020, 4:21 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் காரணமாக எங்கு பார்த்தாலும் இடநெருக்கடி நிலவி வருகிறது. வாழும் வீடாகட்டும், வெளியில் இருக்கும் சாலையகட்டும் எங்கு பார்த்தாலும் இடநெருக்கடி தவரிக்க முடியாத பிரச்னையாக உள்ளது.
Samayam Tamil பார்க்கிங் பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைத்த பஞ்சாப்காரர்
பார்க்கிங் பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைத்த பஞ்சாப்காரர்


குறிப்பாக வாகனத்தில் செல்வோர் இதனால் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். போக்குவரத்து நிறுத்தம், போக்குவரத்து பாதிப்பு, கூட்ட நெரிசல் நாட்டில் அனைத்து நகரங்களிலும் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது.

டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு போன்ற நாட்டின் முக்கிய பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல், இட நெருக்கடி பிரச்னைகள் தலைவிரித்தாடி வருகிறது. இரண்டாம் தர நகரங்களும் இந்த பிரச்னையில் இருந்து தப்பவில்லை.

Read More: அவிநாசி சாலை விபத்தில் 21 பேர் உயிரிழப்புக்கு என்ன காரணம்..?

வாகனங்களின் பெருக்கம் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில், சாலையில் வாகனங்கள் செல்லவே இடமில்லாத நிலை உள்ளது. இதில், வாகனங்களை பார்க் செய்வது என்பது மற்றொரு பெரிய பிரச்னையாகவுள்ளது.

சாதரணமாக வெளியே சென்றாலோ, கடைகளுக்கு சென்றாலோ வாகனங்களை பார்க் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அப்படியே ஒரு இடத்தை பார்த்து பார்க் செய்யப்பட்டாலும், வாகனங்களின் பாதுகாப்பு மற்றொரு பிரச்னையாகவுள்ளது.

இதனாலேயே பலர் வாகனங்களில் செல்வதை தவிர்த்து விட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். எனினும் போக்குவரத்து நெரிசல் குறைந்ததாக இல்லை.

Read More: புதிய பிஎஸ்6 ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!

வீடுகுகளுக்குள் வாகனங்களை பார்க் செய்வதற்கான பிரச்னை இன்னும் அதிகம். தற்போது யாரும் வாகனங்கள் நிறுத்தும் விதத்தில் இடவசதியுடன் வீடுகளை கட்டுவது கிடையாது. இருசக்கர வாகனம் என்றாலும், நான்கு சக்கரம் வாகனம் என்றாலும் வீடுகளுக்கு வெளியியே அவை நிறுத்தப்படும் சூழல் நிலவுகிறது.

இதனால் வாகனங்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகிறது. சாலையோரமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவை திருடப்படும் சம்பவங்களும் அதிகமாக தொடர்கின்றன. இது வாகன உரிமையாளர்களுக்கு தேவையில்லாத தலைவலியை உருவாக்குகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் வெளியான வீடியோ ஒன்றில், நெரிசல் மிகுந்த இடத்திற்குள் ஃபோர்டு ஃபிகோ காரை அசத்தலாக ஒருவர் பார்க்கிங் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமயோஜித புத்தியுடன் அந்த காரை அவர் பார்க்கிங் செய்தது பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.


சமூகவலைதளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்ட இந்த வீடியோவை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து கருத்து பதிவிட்டுள்ளார்.

Read More: விஜய் உடன் நடிக்க மறுத்த ஹீரோ புதிய கியா செல்டோஸ் காரை வாங்கினார்..!

அந்த பதிவில், கார் ஓட்டுநர் மிகவும் சமர்த்தியமாக செயல்பட்டு காரை பார்க்கிங் செய்துள்ளார். மிகவும் நெருக்கடியான இடத்தில் கார் பாதுகாப்பாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. சமயோஜிதமாக சிந்தித்து செயல்பட்டுள்ள இந்த இந்தியருக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

பஞ்சாப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ 1 நிமிடம் 22 விநாடிகள் ஓடக்கூடியதாக உள்ளது. அதில், குடியிருப்புக்குள் கருப்பு கலர் ஃபோர்டு ஃபிகோ கார் நுழைகிறது. அப்போது காருக்கு முன்னால் இரும்பினாலான டிராக் ஒன்று போட போடுகிறது.


அதன்மீது காரை ஏற்றும் ஓட்டுநர், சரியாக அந்த டிராகில் வாகனத்தை நிலைநிறுத்துகிறார். அதை தொடர்ந்து ஓட்டுநரும், மற்ற ஒருவரும் இறங்கி வந்து சக்கரத்துடன் கூடிய அந்த டிராக்கை காருடன் வைத்து நகர்த்தி ஓரமாக நிறுத்துகின்றனர். இதன்மூலம் காரை பாதுகாப்பாக பார்க்கிங் செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

இந்திய வாகனத்துறையில் முக்கிய தொழிலதிபராக இருப்பவர் ஆனந்த் மஹிந்திரா. அவர் இதுதொடர்பான வீடியோவை ரிட்வீட் செய்திருப்பது பலரையும் கவனமீர்த்துள்ளது. இதற்கு கமெண்டு செய்யும் பலரும், மிகவும் நெருக்கடியான இடத்தில் வாகனங்களை பார்க் செய்வதற்கு இந்த முறையை கையாளலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியர்களின் சமயோஜித புத்திக்கு மற்றொரு சான்றாக இந்த சம்பவம் மாறியுள்ளது. மிகவும் எளிமையான வகையில் வழிகளை கண்டறிந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் இந்தியர்களுக்கு நிகர் இந்தியர்கள் தான்.

அடுத்த செய்தி