ஆப்நகரம்

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல காரான சாண்ட்ரோவின் லேட்டஸ்ட் மாடல் அறிமுகம்!

புதுடெல்லி: சாண்ட்ரோ மாடலின் லேட்டஸ்ட் கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 23 Oct 2018, 3:45 pm
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், தனது புதிய சாண்ட்ரோ மாடலை ரூ.3.9 லட்சத்திற்கு இன்று அறிமுகம் செய்துள்ளது. சிறிய குடும்பத்தினருக்கு ஏற்ற வகையில் இருக்கும் இந்த கார், முந்தைய சாண்ட்ரோ கார்களின் வடிவமைப்பான டால் பாய் அடிப்படையிலானது.
Samayam Tamil Santro


இதுகுறித்து பேசிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் எம்.டி மற்றும் சி.இ.ஓ ஒய்.கே.கூ, சாண்ட்ரோ கார் ஆனது இந்தியாவின் புகழ்பெற்ற பிராண்ட் ஆகும். இது லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. புதிய மாடல் சாண்ட்ரோவிற்கு இரண்டு வாரங்களுக்குள் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறினார்.

இந்த காருக்கான முன்பதிவு அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று ஹூண்டாய் தெரிவித்திருந்தது. அதன்படி அறிமுக நிகழ்விற்கு முன்பு வரை 23,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த கார் டிலைட், எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா என 5 விதங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் உச்சபட்ச மாடலின் விலை ரூ.5.46 லட்சம் ஆகும். நடுத்தர மாடலான மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகியவை சி.என்.ஜி கிட், ஏ.எம்.டி வசதிகளைக் கொண்டுள்ளன.

ஹூண்டாய் கார்களில் ஏ.எம்.டி வசதி பெறும் முதல் கார் சாண்ட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதியை கிராண்ட் i10, Xசெண்ட் ஆகிய மாடல்களில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

All-new Hyundai Santro launched, prices start at Rs 3.9 lakh.

அடுத்த செய்தி