ஆப்நகரம்

இந்திய சாலைகளில் தடம்பதிக்க வருகிறது ரூ.3.5 கோடி பெராரி போர்டோஃபினோ!

புதுடெல்லி: பெராரி நிறுவனம் தனது புதிய மாடல் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 1 Oct 2018, 4:40 pm
இத்தாலி நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான பெராரி, டூரிங் ஸ்போர்ட்ஸ் கார் பிரிவில் போர்டோஃபினோ மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் விலை ரூ.3.5 கோடி ஆகும். மிகவும் அதிக விலை கொண்டிருந்தாலும், கார் விற்பனை சந்தையில் பெராரி நிறுவனத்தின் தொடக்க நிலை மாடலாகும்.
Samayam Tamil Ferrari1


இது முந்தைய கலிபோர்னியா டி மாடலுக்கு மாற்றாக தடம் பதிக்க வருகிறது. பெராரி போர்டோஃபினோ மாடல் கார் ஆனது பெராரி நிறுவனத்தின் சமீபத்திய தொழில்நுட்பம், நவீன உபகரணங்கள், எடை குறைவான அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் கலிபோர்னியா டி மாடலை விட 80 கிலோ எடை குறைவாக இருக்கும்.

இந்த காரின் மேற்பகுதி திறந்து மூடும் வகையில் உள்ளது. இதனை 50 கிமீ வேகத்தில் செல்லும் போது கூட இயக்கலாம். இந்த காரில் 3.9 லி, டுவின்-டர்போ வி8 எஞ்சின், 600PS திறன், 760Nm டர்க்யூ வெளிப்படுத்தும் திறன் பெற்றது. F1 மாடலில் இருந்து தழுவப்பட்ட 7 ஸ்பீட் டுவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் இடம்பெற்றுள்ளது.

3.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை அடைந்துவிடலாம். அதிகபட்சமாக 320 கிமீ வேகத்தில் செல்லலாம். காரின் உட்பகுதியில் 10.2 இஞ்ச் டச்-ஸ்கிரீன், எலக்ட்ரானிக் மூலம் மாற்றம் செய்யக்கூடிய இருக்கைகள், வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப அம்சங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண்ட்ர்லி காண்டினெண்டல் ஜிடி மாடலுக்கு போட்டியாக பெராரி போர்டோஃபினோ இருக்கும் என்று கூறப்படுகிறது.

At Rs 3.5 crore, Ferrari drives its new entry-level in India.

அடுத்த செய்தி