வாகனங்கள் பல வரிசையாக நின்று, பணம் செலுத்துவிட்டு, அதற்கு ரசீது பெற்றுவிட்டு சுங்கச்சாவடிகளை கடப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு ஃபாஸ்டேக் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
முன்னதாக, ஒரு சில வாகனங்களுக்கு மட்டுமே இந்த முறை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து ரக வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் முறையை கட்டாயமாக்கி மத்திய அரசு அணை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் முறையில் பணம் செலுத்துவது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வழிவகுக்கும் என மத்திய அரசு நம்புகிறது.
அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் முறையை கட்டாயம் செய்வது குறித்த உத்தரவை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்துவிட்டது. எனினும், இதுகுறித்த போதிய விழிப்புணர்வு வாகன ஓட்டிகளிடம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
தற்போது இதற்கான நடவடிக்கைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, என்எச்ஏஐ-வுக்கான சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக்குக்கான ஆர்.எஃப்.ஐ.டி ஸ்டிக்கர்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதுவும் டிசம்பர் 1ம் தேதி வரை மட்டும் தான் இலவசமாக கிடைக்கும்.
அதற்கான ரூ. 150 வைப்பு தொகையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமே ஏற்று கொள்கிறது. இதனால் பொதுமக்கள் ஃபாஸ்டேட்டுக்கான வைப்பு நிதியை செலுத்த வேண்டிய தேவையில்லை.
இதுகுறித்து பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நவம்பர் 21ம் முதல் ஃபாஸ்ட்டேக்குகளை விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. இது டிசம்பர் 1ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும். ஆனால் டிசம்பர் 2ம் தேதிக்கு பிறகு நிலைமை எவ்வாறு மாறும் என்பதை சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
ஃபாஸ்ட்டேகுகள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும். அதற்குரிய கணக்குகளில் கட்டணத்திற்கான பணத்தை டாப் அப் செய்ய, வாடிக்கையாளர்கள் அவர்களுடைய சொந்த பணத்தை தான் செலவழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் பாயிண்ட் ஆஃப் சேல் எனப்படும் பிஓஎஸ்-ஐ (Point of Sale) POS-யை நிறுவியுள்ளது. இங்கு வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட்டேக்கை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
தற்போதைய நிலவரப்படி நாட்டின் சுங்கச்சாவடிகளில் இருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் வெறும் 40 சதவீத ஃபாஸ்ட்டேக் மூலம் கிடைக்கிறது. இதை கட்டாயமாக்குவதன் மூலம், நேர விரயம் குறைவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படாமல் தடுக்க முடியும்.
முன்னதாக, ஒரு சில வாகனங்களுக்கு மட்டுமே இந்த முறை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து ரக வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் முறையை கட்டாயமாக்கி மத்திய அரசு அணை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் முறையில் பணம் செலுத்துவது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வழிவகுக்கும் என மத்திய அரசு நம்புகிறது.
அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் முறையை கட்டாயம் செய்வது குறித்த உத்தரவை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்துவிட்டது. எனினும், இதுகுறித்த போதிய விழிப்புணர்வு வாகன ஓட்டிகளிடம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
தற்போது இதற்கான நடவடிக்கைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, என்எச்ஏஐ-வுக்கான சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக்குக்கான ஆர்.எஃப்.ஐ.டி ஸ்டிக்கர்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதுவும் டிசம்பர் 1ம் தேதி வரை மட்டும் தான் இலவசமாக கிடைக்கும்.
அதற்கான ரூ. 150 வைப்பு தொகையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமே ஏற்று கொள்கிறது. இதனால் பொதுமக்கள் ஃபாஸ்டேட்டுக்கான வைப்பு நிதியை செலுத்த வேண்டிய தேவையில்லை.
இதுகுறித்து பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நவம்பர் 21ம் முதல் ஃபாஸ்ட்டேக்குகளை விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. இது டிசம்பர் 1ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும். ஆனால் டிசம்பர் 2ம் தேதிக்கு பிறகு நிலைமை எவ்வாறு மாறும் என்பதை சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
ஃபாஸ்ட்டேகுகள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும். அதற்குரிய கணக்குகளில் கட்டணத்திற்கான பணத்தை டாப் அப் செய்ய, வாடிக்கையாளர்கள் அவர்களுடைய சொந்த பணத்தை தான் செலவழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் பாயிண்ட் ஆஃப் சேல் எனப்படும் பிஓஎஸ்-ஐ (Point of Sale) POS-யை நிறுவியுள்ளது. இங்கு வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட்டேக்கை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
தற்போதைய நிலவரப்படி நாட்டின் சுங்கச்சாவடிகளில் இருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் வெறும் 40 சதவீத ஃபாஸ்ட்டேக் மூலம் கிடைக்கிறது. இதை கட்டாயமாக்குவதன் மூலம், நேர விரயம் குறைவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படாமல் தடுக்க முடியும்.