ஆப்நகரம்

200 கி.மீ தொலைவு வரை நிலத்திலும், நீரிலும் பயணிக்கும் சீனாவின் சாதனைப் படகு

நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை படைத்துள்ளது. இந்த படக்கு ராணுவ பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 16 Apr 2019, 7:22 pm
உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய திறன் பெற்ற படகை தயாரித்து சீனா சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த படகின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளதாகவும், இது தாக்கும் திறன் கொண்ட படகு எனவும் சீனா கூறியுள்ளது.
Samayam Tamil நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா புதிய சாதனை
நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா புதிய சாதனை


சீன அரசாங்கத்துடன் கைக்கோர்த்துள்ள வுசாங்க் கப்பல் கட்டமைப்பை செய்யும் நிறுவனம், புதிய நீர் ஊர்தியை தயாரிக்கும் பணியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறங்கியது.

மேலும் அந்த வாகனத்தை ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும் என வுசாங்க் நிறுவனத்திற்கு, சீன அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் முற்றிலும் மாறுபட்ட திறன் கொண்ட படகு தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது.

இதற்கான பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், இந்த புதிய தாக்கும் திறன் கொண்ட படகுக்கு மரைன் லிசார்ட் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இதற்காக சோதனை ஓட்டத்தை சீன அரசு மேற்கொண்டு வந்தது.

தற்போது அது வெற்றியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய திறன் பெற்ற படகை தயாரித்த முதல் நாடு என சீன சாதனை படைத்துள்ளது.

சீனாவின் மரைன் லிசார்ட் படகில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை இந்த படகின் ஆயுதப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ளன. செயற்கைகோள் மூலமும் இந்த படகை இயக்கும் முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம். மேலும் நிலத்தில் அதிகபட்டசமாக ஆயிரத்து 200கி.மீ தொலைவு வரை இந்த படகை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி