ஆப்நகரம்

இப்ப டம்மியா இருக்கலாம்; ஆனா கெத்தா விஸ்வரூபம் எடுக்கத் தயாரான ஆட்டோ மேக்கர்ஸ்!

புதுடெல்லி: எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனைச் சந்தை படிப்படியாக விஸ்வரூபம் எடுக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Samayam Tamil 4 Jan 2019, 10:36 am
வருங்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கருதுகின்றனர். எனவே தங்கள் நிறுவனங்களையும் எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் இப்போதே ஈடுபடுத்தி உள்ளன.
Samayam Tamil EV


தற்போது ஆட்டோமொபைல் விற்பனைச் சந்தையில் சிறிய இடத்தையே எலக்ட்ரிக் வாகனங்கள் பிடித்துள்ளன. இருப்பினும் படிப்படியாக சந்தையில் பெருவாரியான இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக சில ஆண்டுகள் வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக சீனா, ஐரோப்பிய நாடுகளில் எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க, ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த வாகனங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை பெருமளவு தவிர்க்கும் என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களில் பெரும்பாலும் லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுத்தப் படுகின்றன. இதன் விலையானது தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக குறையத் தொடங்கியுள்ளது.

இது எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் உந்துதலாக அமைந்து வருகிறது.

கடந்த ஆண்டைப் பொறுத்தவரையில் எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பிற்காக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 5.5 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது ஆட்டோமொபைல் சந்தையில் புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி