ஆப்நகரம்

ஒன்றுக்கும் மேற்பட்ட மின்வாகனங்களை தயாரித்து வரும் ஹீரோ நிறுவனம்

இந்தியாவில் இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டர்களை ஒரே சமயத்தில் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 8 Jul 2019, 5:20 pm
எரிக் ரேசிங் என்ற நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ள ஹீரோ நிறுவனம், மின்வாகன தயாரிப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகளை உருவாக்கி வருகிறது. இதற்கான ஆய்வுப் பணிகள், ஜெயப்பூரில் உள்ள Centre Of Innovation & Technology என்ற இடத்தில் நடந்து வருகின்றன.
Samayam Tamil மின்சார வகான தயாரிப்பில் மும்முரம் காட்டும் ஹீரோ
மின்சார வகான தயாரிப்பில் மும்முரம் காட்டும் ஹீரோ


இங்கு, மின்சார பைக் மற்றும் மின் ஸ்கூட்டர்களை ஒரேநேரத்தில் தயாரித்து வருவதாக ஹீரோ நிறுவனத்தின் வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன. நிதி அயோக் பரிந்துரையின் படி இந்த வாகனங்கள் தயாராகி வருகின்றன.

இதனுடைய தொழில்நுட்பம், செயல்திறன், வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அயோக் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் 2025ம் ஆண்டு ஏப்ரல் முதல் 150 சிசி ரக வாகனங்கள் விற்பனைக்கும், தயாரிப்பு பணிகளுக்கும் தடை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதை உறுதி செய்யும் விதத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், மின்சார வாகன உற்பத்தி மற்றும் விற்பனைக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு விடை கொடுக்க மத்திய அரசு கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது போன்றே தெரிகிறது.

முன்னதாக, அரசின் இந்த முயற்சிக்கு இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களாக ஹீரோ, பஜாஜ், ஹோண்டா, டிவிஎஸ், சுஸுகி போன்ற நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் தற்போது இவை மின்சார இருசக்கர வாகனங்களை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

அதன்படி, ஹீரோ ஒரேசமயத்தில் தயாரித்து வரும் மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டரை வரும் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக நித வாகனங்கள் தயாராகி வருகின்றன.

அடுத்த செய்தி