ஆப்நகரம்

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் புதுரக ஹோண்டா கார்கள்!

முன்னணி கார் நிறுவனமான ஹோண்டா, மூன்று கார்களை தரம் உயர்த்தியுள்ளது. இந்த கார்கள் விரைவில் இந்தியாவில் விற்பனை வரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 7 Feb 2018, 4:03 pm
புதுடெல்லி: முன்னணி கார் நிறுவனமான ஹோண்டா, மூன்று கார்களை தரம் உயர்த்தியுள்ளது. இந்த கார்கள் விரைவில் இந்தியாவில் விற்பனை வரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Samayam Tamil hondas new amaze cr v civic to hit indian roads in 2018 19
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் புதுரக ஹோண்டா கார்கள்!


ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் ஹோண்டா. இதன் விற்பனை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிறுவனம், கிரேட்டர் நொய்டாவில் தற்போது நடக்கும் 2018ம் ஆண்டுக்கான வாகன கண்காட்சியில் மூன்று புதிய வடிவிலான கார்களை தரம் உயர்த்தி அறிமுகம் செய்தது.

அதில் சிஆர் -வி, சிவிக் மற்றும் அமேஸ் ஆகிய கார்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கார்களில் பல்வேறு புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என நம்புவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹோண்டா நிறுவன தலைவர் ஹாச்சிகோ கூறுகையில் '' உலக அளவில் எங்கள் நிறுவனத்தின் கார்கள் 53 லட்சம் விற்பனையாகியுள்ளது. இதில் இந்தியாவில் பங்கு மிகவும் முக்கியமானது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆறு புதிய மாடல் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். சிஆர் - வி மற்றும் சிவிக் மாடல் கார்கள் 2018 -19ல் அறிமுகப்படுத்தப்படும்'' என்றார்.

NEW DELHI: Honda Cars India on Wednesday has unveiled the all-new versions of Amaze, CR-V and Civic at the Auto Expo 2018.

அடுத்த செய்தி