ஆப்நகரம்

கார்கள் விலையை உயர்த்த ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் முடிவு

அடுத்த ஆண்டு முதலாக, கார்கள் விலையை அதிகரிக்க உள்ளதாக, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், ரெனால்ட், டொயோடா உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

TOI Contributor 15 Dec 2016, 1:30 pm
அடுத்த ஆண்டு முதலாக, கார்கள் விலையை அதிகரிக்க உள்ளதாக, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், ரெனால்ட், டொயோடா உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Samayam Tamil hyundai india tata motors and other companies decided to raise car price
கார்கள் விலையை உயர்த்த ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் முடிவு


வாகனச் சந்தையில் நிலவும் தேவை மற்றும் வாகன உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், கார்கள் விலையை உயர்த்த, முன்னணி நிறுவனங்கள் பலவும் திட்டமிட்டுள்ளன. இதன்படி, ஹூண்டாய் நிறுவனம் வரும் ஜனவரி மாதம் தொடங்கி, தனது அனைத்து வகை கார்களின் விலையையும் ரூ.1 லட்சம் வரை உயர்த்த உள்ளதாகக் கூறியுள்ளது.

ஹூண்டாய் ஈயான் தொடங்கி, சான்டா ஃபீ வரையான அனைத்து ரகக் கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம், தனது நிசான் மற்றும் டட்சன் ரக கார்களின் விலையை ரூ.30,000 வரை அதிகரிக்க உள்ளதாகக் கூறியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் பயணிகள் ரக வாகனங்களின் விலையை ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 2016 ஜனவரி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

ரெனால்ட் இந்தியா, டொயோடா கிர்லோஸ்கர் ஆகிய நிறுவனங்களும், அடுத்த மாதம் முதலாக, தங்களது கார்களின் விலையை 3 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

Tata Motors, Hyundai Motor India, Renault India, Nissan Motor India, Toyota Kirloskar said that they will hike car prices across models from January to offset higher input costs, fluctuating exchange rates and marketing expenses.

அடுத்த செய்தி