ஆப்நகரம்

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனச் செயல்பாட்டிற்கு போதிய சூழல் இல்லை; வோக்ஸ்வேகன் அதிகாரி!

அகமதாபாத்: எலக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு போதிய சூழல் இந்தியாவில் இல்லை என்று வோக்ஸ்வேகன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

TIMESOFINDIA.COM 10 Oct 2018, 1:01 am
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளால் வாகனங்கள் இயங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி, ஆட்டோமொபைல் சந்தை மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கான சூழலை உருவாக்க பல்வேறு நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
Samayam Tamil Electric Vehicles


இதுதொடர்பாக பேசிய வோக்ஸ்வேகன் பயணிகள் கார்(இந்தியா) நிறுவன இயக்குநர் ஸ்டீபென் நாப் கூறுகையில், எலக்ட்ரிக் கார்களுக்கு அரசியல் ரீதியிலான கட்டமைப்பு மற்றும் தெளிவான பார்வை இந்தியாவில் தேவைப்படுகிறது. ஆனால் அத்தகைய பார்வை இங்கு இல்லை.

எலக்ட்ரிக் கார்களுக்கு ஏராளமான மானியங்கள் வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களுக்காக மிகப்பெரிய முதலீடுகளைச் செய்யும். இதற்காக தெளிவான வழிகாட்டுதல் தேவை. ஆனால் அத்தகைய நிலையில் நாங்கள் இல்லை.

குறிப்பாக சார்ஜிங் மையங்களை தரமானதாக்க வேண்டும். இதுகுறித்து ஆட்டோமொபைல் வல்லுநர்கள் அரசுடன் பேச்சுவார்த்தையில் இருக்கின்றனர். டீசல், பெட்ரோல் எஞ்சின்களுக்குப் பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டு வருவது மிகப்பெரிய சவால்.

வரும் ஆண்டுகளில் 70 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய சாதனங்களின் மீது ரூ.8,000 கோடி முதலீடு செய்ய உள்ளோம். எங்களின் முதல் தயாரிப்பு வரும் 2020ல் விற்பனைக்கு வருகிறது. இதற்கான மேம்பாட்டு மையம் ஜார்க்கண்டில் அமைய இருக்கிறது. அங்கு எஸ்.யு.வி வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என்றார்.

India lacks ecosystem for electric cars says Volkswagen official.

அடுத்த செய்தி