ஆப்நகரம்

மீண்டும் அமோக வரவேற்பு அளித்த இந்தியாவுக்கு கைமாறு செய்த ஜாவா நிறுவனம்..!

இந்தியாவில் மீண்டும் களமிறங்கியுள்ள ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு அமோக வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் நெகிழ்ச்சிகரமான ஒரு சம்பவத்தை செய்து காட்டியுள்ளது ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்

Samayam Tamil 16 Jul 2019, 8:18 pm
மீண்டும் இந்தியாவிற்குள் பிரவேசித்து விற்பனையில் கலக்கி வரும் ஜாவா நிறுவனம், அதன் முதல் மோட்டார்சைக்கிளை ஏலம் விட்டு கிடைத்த பணத்தை நாட்டின் ராணுவ கட்டமைப்பு மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ச்சி பணிகளுக்காக வழங்கியுள்ளது.
Samayam Tamil ஏலத்தில் ரூ.45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்
ஏலத்தில் ரூ.45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்


பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஜாவா மோட்டார்சைக்கிள், 1970ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் களமிறங்கியுள்ளது. அதன்படி, கடந்த 2018ம் ஆண்டில் பாரம்பரிய மற்றும் கிளாசிக் தோற்றத்திலான ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் என மூன்று புதிய மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.

அதில் ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய மாடல்கள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு நிலவியது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்001 என்ற சேஸிஸ் எண்ணைக் கொண்ட பைக் மட்டும் பிரத்யேகமாக ஏலம் விட்டது. அது ரூ. 45 லட்சம் வரை ஏலத்திற்கு சென்றது.

ஜாவாவின் இந்த முதல் மோட்டார்சைக்கிளை வாங்கிய வாடிக்கையாளர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இந்தியாவில் நிலவிய உச்சகட்ட வரவேற்பின் அடையாளமாக இந்த ஏலச் சாதனை திகழ்கிறது. ஜாவா நிறுவனத்திற்கு எழுந்துள்ள இந்த வரவேற்பு வாகன ஆர்வலர்களை ஆச்சர்யம் அடையச் செய்துள்ளது.

அதன்படி, கூடுதலாக அந்நிறுவனம், நிதியைத் திரட்டி, ஏலத்தொகையுடன் சேர்த்து ரூ. 1.43 கோடி மதிப்பிலான பணத்தை இந்திய நாட்டின் ராணுவ கட்டமைப்பு மற்றும ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி