ஆப்நகரம்

கெத்தா, ஸ்டைலா, மரண மாஸ் உடன் இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் லம்ப்ரெட்டா!

புதுடெல்லி: லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் மீண்டும் புதிய பரிமாணத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Samayam Tamil 19 Dec 2018, 12:00 am
மிகப்பிரபலமான ஸ்கூட்டர் பிராண்ட்களில் ஒன்றான லம்ப்ரெட்டா, இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு மீண்டும் வருகிறது. இந்த ஸ்கூட்டர்கள் 1947ஆம் ஆண்டு, இன்னோசென்டி என்ற நிறுவனத்தால் இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டது.
Samayam Tamil lambretta-scooters


இதையடுத்து 1972ஆம் ஆண்டு, இன்னோசென்டி நிறுவனத்தின் மிலன் ஆலையில் இருந்து இயந்திரங்களை இந்திய அரசு உதவியுடன் ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிமெட்(SIL) வாங்கியது. லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்களை உருவாக்க, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிப்பு ஆலை கட்டமைக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களுடன், லம்ப்ரெட்டா/ லம்ப்ரோ என்ற பெயருக்கான உரிமத்தையும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட்(SIL) வாங்கியது. இதைத் தொடர்ந்து 1975ஆம் ஆண்டு முதல் விஜய் சூப்பர் என்ற பெயரில் உள்ளூர் சந்தையில் ஸ்கூட்டர்கள் விற்பனைத் தொடங்கியது. இதனை லம்ப்ரெட்டா என்ற பெயரில் ஏற்றுமதியும் செய்தனர்.

இதன்பிறகு விக்ரம்/ லம்ப்ரோ என்ற பிராண்ட் பெயரில் 3 சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்தனர். இந்நிலையில் 1997ஆம் ஆண்டு ஸ்கூட்டர் தயாரிப்பை நிறுத்திக் கொண்டு, 3 சக்கர வாகனத் தயாரிப்பில் ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட்(SIL) நிறுவனம் கவனம் செலுத்தியது. இந்த சூழலில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, எஸ்.ஐ.எல் ஸ்கூட்டர் தயாரிப்பில் மீண்டும் களமிறங்கியுள்ளது.

ஆனால் இம்முறை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த நிறுவன ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் லம்ப்ரெட்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டிற்கு வரும். இது வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும்.

லம்ப்ரெட்டா எலக்ட்ரிக் ஸ்ஊட்டர்கள் இத்தாலியின் மிலன் நகரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து, இதுவரை அந்நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்தியாவில் நொய்டாவின் லோஹியா ஆட்டோ மற்றும் புதுடெல்லியின் பார்ட் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அடுத்த செய்தி