ஆப்நகரம்

கதிகலங்கி நிற்கும் ஆட்டோமொபைல் துறை சரிவுக்கான முக்கிய காரணங்கள் இதுதான்..!

நடப்பாண்டில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் விற்பனை பெருத்த அடியை சந்தித்துள்ளது. விற்பனை வீழ்ச்சி காரணமாக பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை குறைந்து கொண்டே வருகின்றன.

Samayam Tamil 20 Aug 2019, 8:59 pm
ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சியின் காரணமாக, அந்த துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் காரணம் கூறுகின்றனர். இந்நிலையில் ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் சரிவுக்கு குறித்த முக்கிய காரணங்களை அறிவோம்.
Samayam Tamil ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை- வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்
ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை- வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்


மின்வாகன பயன்பாட்டுக்கான நடவடிக்கை:
மக்களிடையே மின்சார கார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு, எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் பல்வேறு மானியம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் எரிபொருட்கள் மீதான முதலீடு செய்வதில் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நடவடிக்கைகள் வாகன விற்பனையில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடகை கார்களின் வளர்ச்சி:
பேருந்து பயணங்கள், ஆட்டோ சவாரிகள், டூவீலர் பயன்பாடு ஆகியவற்றை கடந்து, தனிநபர் போக்குவரத்து தேவைகளில் உபேர், ஓலா வாடகை கார்கள் ஆதிக்கம் செய்யும் காலம் இது. ஒரு செயலியின் மூலம் எளிதாக ஓலா, உபேர் கார்களை பெற்றுவிடலாம் என்பதால் தனியாக வாகனம் வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. கட்டணமும் நியாயமாக இருப்பதால் உபேர், ஓலா வளர்ச்சி விஸ்வரூபம் அடைந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல்:
நாட்டிலுள்ள சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில், இருசக்கர வாகனங்களுக்கு பெரிய பாதிப்பு கிடையாது. ஆனால் போக்குவரத்து நெரிசலில் கார்கள் சிக்கிக்கொண்டால் வாகன ஓட்டுக்கு மன உளைச்சலையே ஏற்படுத்தி விடும். இதனால் பலரும் சொந்தமாக கார் வாங்குவதை தவிர்த்து விடுகின்றனர்.

வாகன பயன்பாட்டுக்கான புதிய விதிகள்:
கடந்த 2017 ஏப்ரல் முதல் பிஎஸ் 4 வாகன விதிகள் நடைமுறைக்கு வந்தன. அது வந்த சில ஆண்டுகளில், 2020 ஏப்ரல் முதல் பிஎஸ் 6 வாகன விதிகள் நடைமுறைக்கு வரவுள்ள. குறைந்த இடைவெளியில் வாகன கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டது வாகன விற்பனை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் வாகனங்களுக்கான விலை அதிகரிக்கும் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

வாகனம் வாங்க கடன் கிடைப்பதில் சிக்கல்:
இன்றைய காலத்தில் புதிய வாகனங்கள் வாங்க கடன் வாங்குவது எட்டாக் கனியாகி வருகிறது. லோன் வழங்குவதில் வங்கிகள் கடுமை காட்டுவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் ஏற்படும் தாக்கத்தினால் நாட்டிலுள்ள பெரும்பாலான வாகன டீலர்களும் வாடிக்கையாளர்களிடம் இதே கண்டிப்பை காட்டி வருகின்றன.

சலுகைகளுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்:
கடந்த 2017ம் ஆண்டு பிஎஸ் 4 வாகன விதிகள் அமல்படுத்தப்பட்ட போது, பிஎஸ் 3 எஞ்சின் கொண்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. இதனால் நிலுவையில் இருந்த பிஎஸ் 3 எஞ்சின் கொண்ட வாகனங்களை பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி நிறுவனங்கள் விற்பனை செய்தன. வரும் 2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 6 வாகன விதிகள் அமலுக்கு வருகின்றன. அப்போது பிஎஸ் 4 எஞ்சின் கொண்ட வாகனங்கள் அதிரடி சலுகை வழங்கி விற்கப்படும் என்ற காரணத்தினால், வாடிக்கையாளர்கள் புதிய வாகனம் வாங்குவதை தள்ளி வைத்துள்ளனர் என்று எண்ணப்படுகிறது.

பிஎஸ் 6 எஞ்சின்- வாடிக்கையாளர்கள் குழப்பம்:
பிஎஸ் 6 வாகன விதிகள் வரும் 2020 முதல் விற்பனைக்கு வருகிறது. இதே விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்தினால் மட்டுமே வாகனங்களில் பழுது எற்படாமல் இருக்கும். நாட்டின் பல்வேறு இடங்களில் பிஎஸ் 6 விதிகளுக்கான எரிபொருள் கிடைத்து வந்தாலும், இன்னும் சில சிக்கல்கள் இருந்து வருகின்றன. எனினும், டெல்லியில் கடந்த 2017 முதல் பிஎஸ் 6 விதிகளுக்குட்பட்ட எரிபொருள் கிடைக்கின்றன. இதனால், மக்களுக்கு ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாகவும் வாகன விற்பனை சரிந்துள்ளது.

டீசல் கார்கள் உற்பத்தி குறைவு:
பிஎஸ் 6 வாகன விதிகள் நடைமுறைக்கு வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் டீசல் வாகன உற்பத்தியை கைவிட்டு வருகின்றன. புதிய விதிகளுக்கு ஏற்ப டீசல் வாகனங்களை மேம்படுத்த அதிக செலவாகும் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. இதனால் வரும் காலங்களில் டீசல் வாகன பயன்பாட்டு கைவிடப்படும் என்ற முன்முடிவு காரணமாக பெரும்பாலான வாடிக்கையாளர்கள் டீசல் வாகன பக்கமே தலைகாட்டுவது கிடையாது. இதன் காரணமாகவும் வாகன விற்பனை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அடுத்த செய்தி