ஆப்நகரம்

என்ன தான் ஆச்சு - சரிவில் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம்; ஆட்டம் கண்ட விற்பனை!

மாருதி சுசுகி நிறுவனத்தின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை யாரும் எதிர்பார்க்காத வகையில் சரிவில் முடிவடைந்துள்ளது.

Samayam Tamil 4 Mar 2019, 4:35 pm
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாருதி சுசுகி திகழ்கிறது. இந்நிறுவனத்தின் கடந்த பிப்ரவரி மாத கார் விற்பனை 1,48,682 ஆகும். இதுவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1,49,824 என்ற எண்ணிக்கையில் கார்களை விற்றிருந்தது. இதுகுறித்து மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு விற்பனை 1,39,100 என்ற எண்ணிக்கையில் நடப்பாண்டு அதிகரித்துள்ளது.
Samayam Tamil Maruti Suzuki


கடந்த ஆண்டு 1,37,900 என்ற அளவில் கார் விற்பனை இருந்தது குறிப்பிடத்தக்கது. அல்டோ போன்ற சிறிய கார்கள் 24,751 என்ற எண்ணிக்கையில், கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை ஆகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 33,789 என்ற எண்ணிக்கையில் விற்கப்பட்டுள்ளது. இதனால் 26.7% அளவிற்கு விற்பனைச் சரிவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் காம்பேக்ட் மாடல்களான வேகான் ஆர், ஸ்விப்ட், செலெரியோ, இக்னிஸ், பலீனோ, டிசையர் போன்ற மாடல்களின் விற்பனை 11.4% அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது நடப்பாண்டு பிப்ரவரியில் 72,678 அளவிலும், கடந்தாண்டு பிப்ரவரியில் 65,213 அளவிலும் விற்பனை இருந்துள்ளது. நடுத்தர செடான் சியாஸ் மாடல் 3,084 மற்றும் 4,897 என்ற எண்ணிக்கையில் நடப்பாண்டு மற்றும் கடந்தாண்டு விற்பனை இருந்துள்ளன.

யுடிலிட்டி வாகனங்களான விடாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ், எர்டிகா போன்றவை 7.4% அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 20,324 அளவிலும், நடப்பாண்டு பிப்ரவரியில் 21,834 அளவிலும் விற்பனை இருக்கிறது. ஏற்றுமதியைப் பொறுத்தவரை நடப்பாண்டில் 9,582 என்ற எண்ணிக்கையிலும், கடந்த ஆண்டின் பிப்ரவரியில் 11,924 என்ற எண்ணிக்கையிலும் விற்பனை இருந்துள்ளது. இதன்மூலம் 19.6% அளவிற்கு விற்பனைச் சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி