மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகபட்ச விற்பனையை நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் எட்டியுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் தனது விற்பனை விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை இந்தியாவில் அதிக கார்களை விற்றது இந்த காலாண்டில் தான் என்று கூறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை அந்நிறுவனத்தின் 3650 கார்கள் விற்பனையாகியுள்ளன. 2016ஆம் ஆண்டில் இதே காலாண்டில் 3622 கார்களை மட்டுமே விற்பனையாகின. இந்த ஆண்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு மெர்சிடிஸ் இ க்ளாஸ் (Mercedes E Class) மற்றும் எஸ்.யூ.வி. போர்ட்ஃபோலியோ (SUV portfolio) ஆகிய கார்கள் தான் முக்கியக்காரணம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, எஸ்.யூ.வி. போர்ட்ஃபோலியோ காரின் விற்பனை கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளது. மெர்சிடிஸ் இ க்ளாஸ் இந்தியாவின் அதிகம் விற்கப்பட்ட காராக உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி அறிமுகம் செய்ப்பட்ட மெர்சிடிஸ் இ க்ளாஸ் காரை ஆறு நாட்களில் 500 பேர் வாங்கியுள்ளனர்.
இருப்பினும், அடுத்தடுத்த காலாண்டுகளில் கார்களின் விற்பனையில் ஒற்றை இலக்க வளர்ச்சியை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் தனது விற்பனை விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை இந்தியாவில் அதிக கார்களை விற்றது இந்த காலாண்டில் தான் என்று கூறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை அந்நிறுவனத்தின் 3650 கார்கள் விற்பனையாகியுள்ளன. 2016ஆம் ஆண்டில் இதே காலாண்டில் 3622 கார்களை மட்டுமே விற்பனையாகின. இந்த ஆண்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு மெர்சிடிஸ் இ க்ளாஸ் (Mercedes E Class) மற்றும் எஸ்.யூ.வி. போர்ட்ஃபோலியோ (SUV portfolio) ஆகிய கார்கள் தான் முக்கியக்காரணம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, எஸ்.யூ.வி. போர்ட்ஃபோலியோ காரின் விற்பனை கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளது. மெர்சிடிஸ் இ க்ளாஸ் இந்தியாவின் அதிகம் விற்கப்பட்ட காராக உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி அறிமுகம் செய்ப்பட்ட மெர்சிடிஸ் இ க்ளாஸ் காரை ஆறு நாட்களில் 500 பேர் வாங்கியுள்ளனர்.
இருப்பினும், அடுத்தடுத்த காலாண்டுகளில் கார்களின் விற்பனையில் ஒற்றை இலக்க வளர்ச்சியை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.