ஆப்நகரம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை; போராட்டத்தை வாபஸ் பெற்ற ராயல் என்ஃபீல்டு ஊழியர்கள்!

சென்னை: ராயல் என்ஃபீல்டு நிறுவன ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

TIMESOFINDIA.COM 14 Nov 2018, 8:39 pm
சென்னையை அடுத்த ஒரகடம், திருவொற்றியூர் மற்றும் வல்லம் வடகல் ஆகிய இடங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பு கிளைகள் இயங்கி வருகின்றன. இங்கு பணிபுரியும் 6,000 ஊழியர்களில் 4,000 பேர் ஊதிய மறுவரையறை, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil Royal-Enfield


மேலும் பணியிடத்தில் செல்போனைக் கொண்டு வராமல், பாதுகாவலர்களிடன் ஒப்படைக்கும் நடைமுறைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதையடுத்து நேற்று அனைத்து கிளைகளிலும் முழு எண்ணிக்கையில் ஊழியர்கள் பணிக்குச் சென்றனர். இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனம், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பணியிடங்களில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் முழு ஒத்துழைப்பு நல்குகிறது.

ஒழுக்கம், குழு உணர்வு, மரியாதை ஆகியவற்றின் அதிகபட்ச நேர்மையை கடைபிடிக்கிறது என்று கூறியுள்ளது.

அதேசமயம் யமஹா மோட்டார் மற்றும் ஜப்பானிய ஆட்டோ உபகரண தயாரிப்பு நிறுவனமான எம்.எஸ்.ஐ ஆகியவற்றின் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மாவட்ட பணியாளர் ஆணையர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்த செய்தி