ஆப்நகரம்

ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிய போது வெடித்த செல்போன்- இளைஞர் கவலைக்கிடம்

சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஹெல்மெட்டுக்குள் இருந்த செல்போன் வெடித்ததில் வாகன ஓட்டி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Samayam Tamil 14 Jul 2019, 8:38 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் புளியரசி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
Samayam Tamil ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிய போது வெடித்த செல்போன்- இளைஞர் படுகாயம்
ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிய போது வெடித்த செல்போன்- இளைஞர் படுகாயம்


அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. பைக்கை நிறுத்துவிட்டு தன்னுடைய செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து அவர் பேசிக்கொண்டே சென்றார். எதிர்பாராத விதமாக அந்த செல்போன் பெருத்த சத்தத்துடன் வெடித்தது.

இதனால் அவருடைய கை, முகம், தலை, காது, மூக்கு ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள், வண்டியை நிறுத்திவிட்டு கீழே விழுந்தவருக்கு உதவி செய்தனர். அதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினரும் உதவி செய்தனர்.

பிறகு சம்பவம் குறித்து மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே விபத்து நடந்த சூளகிரி போலீசாருக்கு வருகை தந்தனர். விபத்தால் பாதிக்கப்பட்ட ஆறுமுகத்தை மீட்ட காவலர்கள் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு படுகாயம் ஏற்பட்ட பகுதிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆறுமுகம் விவோ ஸ்மார்ட்போனை ஹெல்மெட்டிற்குள் வைத்து பேசியது தெரியவந்தது.

அந்த ஸ்மார்ட்ஃபோன் எதற்காக வெடித்தது என்பது தொடர்பாக இன்னும் தகவல் வெளியாகவில்லை. எனினும், போனின் உடைந்த பாகங்கள் தொழில்நுட்ப பரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி