ஆப்நகரம்

பிஎஸ்-4 வாகனங்களுக்கு பதிவு நிறுத்தம்- உச்சநீதிமன்றத்தை நாடும் சியாம்..!

இந்தியாவிலுள்ள குறிப்பிட்ட மாநில அரசுகள் பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்வதை நிறுத்திவிட்டன. இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்களும், டீலர்ஷிப்புகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

Samayam Tamil 17 Mar 2020, 1:46 pm
இருப்பிலுள்ள பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் பல்வேறு டீலர்ஷிப்புகளும் படாதபாடு பட்டு வரும் நிலையில், நாட்டிலுள்ள பல்வேறு மாநில அரசுகள் பிஎஸ் 4 வாகனங்களை பதிவு செய்வதை நிறுத்திவிட்டன.
Samayam Tamil குறிப்பிட்ட மாநிலங்களில் பிஎஸ் 4 வாகனங்களுக்கான பதிவு நிறுத்தம்
குறிப்பிட்ட மாநிலங்களில் பிஎஸ்-4 வாகனங்களுக்கான பதிவு நிறுத்தம்


வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படும். ஆனால் குறிப்பிட்ட சில மாநிலங்கள் முன்கூட்டியே பிஎஸ்-4 வாகனங்களுக்கான பதிவை நிறுத்துவிட்டன.

இதனால் அதிருப்தி அடைந்த இந்திய ஆட்டோமொபைல் துறை உற்பத்தியாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. மார்ச் 31ம் தேதி வரை பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அவை மனு முறையிட்டுள்ளன.

Read More: பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு முன்பதிவு துவக்கம்- இதுதான் விலை..!

குறிப்பிட்ட மாநிலங்கள் பிஎஸ்-4 வாகனங்களுக்கான பதிவை நிறுத்தச் சொல்லி தங்களுடைய வட்டாச்சியர் போக்குவரத்து கழகங்களுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளதாகவும், மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு இருக்கும் நிலையில், மாநிலங்களில் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என வாகன உற்பத்தியாளர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Read More: பார்வை குறைபாடுடையவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்- மத்திய அரசு..!

இதுதொடர்பாக பேசிய சியாம் (SIAM- Society of Indian Automobile Manufacturers) கூட்டமைப்பின் தலைவர் ராஜன் வஹேந்திரா, குறிப்பிட்ட மாநிலங்களில் இந்த நடைமுறையால் பல்வேறு உற்பத்தியாளர்கள், டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பிஎஸ்-6 நடைமுறைக்கு வருவதற்கு மார்ச் 31ம் தேதி காலக்கெடு இருக்கும் நிலையில், பல்வேறு டீலர்ஷிப்புகளில் பிஎஸ்-4 வாகனங்கள் தேக்கம் அடையும் சூழல் உருவாகியுள்ளது என கூறினார்.

Read More: 2020 ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..?

ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ் 6 வாகன விதிகள் நடைமுறைக்கு வருவது, நாட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இருப்பிலுள்ள பிஎஸ்-4 வாகனங்களுக்கு பல்வேறு நிறுவனங்களும் டீலர்ஷிப்புகளும் சலுகைகள் அறிவித்து வரும் நிலையில் குறிப்பிட்ட மாநில அரசுகளின் இந்த உத்தரவு கலக்கம் அடையச் செய்துள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் குறிப்பிட்ட மாநில அரசுகளில் இதுபோன்ற நடவடிக்கை வாகனச் சந்தைக்கு மேலும் இடையூறு ஏற்படுத்தும் என்கின்றனர் விற்பனையாளர்கள்.

அடுத்த செய்தி