ஆப்நகரம்

இந்தியாவில் விரைவில் தடை செய்யப்படும் பெட்ரோல் இருசக்கர வாகனங்கள்

இந்தியாவில், நிதி அயோக் பரிந்துரையின் படி 150-சிசிக்கும் குறைவான இருசக்கர வாகனங்களை 2025ம் ஆண்டு முதல் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவது வாகன பயன்பாட்டாளர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 29 May 2019, 7:57 pm
இந்தியாவில், நிதி அயோக் பரிந்துரையின் படி 150-சிசிக்கும் குறைவான இருசக்கர வாகனங்களை 2025ம் ஆண்டு முதல் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவது வாகன பயன்பாட்டாளர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil இந்தியாவில் பெட்ரோல் டூ-வீலர்களுக்கு விரைவில் தடை
இந்தியாவில் பெட்ரோல் டூ-வீலர்களுக்கு விரைவில் தடை


மத்திய அரசு பரிந்துரைத்த, India’s think tank என்ற அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களும், 2025 முதல் 150 சிசிக்கு குறைந்த பெட்ரோல் மாடல்களை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 2.1 கோடி பெட்ரோல் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் இதே காலகட்டத்தில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரின் மொத்த விற்பனை வெறும் 1,26,000 மட்டும் ஆகும். ஆனால் இதற்கு முந்தைய நிதியாண்டு 17-2018 காலத்தில் 54,800 மட்டும் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தன.

தற்போது இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர், ஓகினாவா போன்ற முன்னணி மின்சார இரு சக்கர வாகன நிறுவனங்களு FAME II ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

நிதி அயோக் பரிந்துரைப்படி, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசினை கட்டுப்படுத்த பெட்ரோல் இரு சக்கர வாகனங்களில் 150சிசி க்கு குறைந்த திறன் பெற்ற பைக் மற்றும் ஸ்கூட்டர்களை 2025 முதல் முற்றிலும் விற்பனை நிறுத்தப்படுவதுடன், இதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் டூ வீலர்களை நிலைநிறுத்தவும், 2023 முதல் மூன்று சக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த பரிந்துரையை அரசு ஏற்கும் பட்சத்தில் பெட்ரோல் வாகன விற்பனை எண்ணிக்கை கட்டுப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.

அடுத்த செய்தி