ஆப்நகரம்

எஞ்சின் தீப்பிடிப்பதால் 20,000 பி.எம்.டபிள்யூ கார்களுக்கு அதிரடி தடை!

பி.எம்.டபிள்யூ கார்களுக்கு எஞ்சின் தீவிபத்து காரணமாக தென்கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Aug 2018, 10:55 pm
சியோல்: பி.எம்.டபிள்யூ கார்களுக்கு எஞ்சின் தீவிபத்து காரணமாக தென்கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil BMW


ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பி.எம்.டபிள்யூ, உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. இந்நிலையில் அதிகப்படியான வாயு வெளியேற்ற பிரச்சனை காரணமாக, 10க்கும் மேற்பட்ட கார்களின் எஞ்சினில் தீப்பிடித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தென்கொரிய நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 20,000 பி.எம்.டபிள்யூ கார்கள் தடை செய்யப்படுகின்றன.

இந்த கார்களில் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யாமல் ஓட்டுநர்கள் பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை தடையை மீறினால், ஓராண்டிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும். ஓட்டுநர்கள் தங்கள் கார்களில் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்கின்றனரா என்பதில் கவனம் செலுத்த உள்ளோம்.

தடையை தொடர்ந்து மீறும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் எஞ்சின் பிரச்சனை காரணமாக 40 பி.எம்.டபிள்யூ கார்கள் தீப்பிடித்துள்ளன.

சில பார்க்கிங் பகுதிகளில் பி.எம்.டபிள்யூ கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களை இயக்குவதை ஓட்டுநர்களும் தவிர்த்து வருகின்றனர். கடந்த மாதம் பி.எம்.டபிள்யூ நிறுவனம் தனது 42 வகையான மாடல்களைச் சேர்ந்த 1,06,000 கார்களை திரும்பப் பெற்றுள்ளது.

South Korea to ban about 20,000 BMW vehicles after engine fires.

அடுத்த செய்தி