ஆப்நகரம்

பொங்கல் முதல் சிவப்பு வண்ணத்திற்கு மாறும் தமிழக அரசு நகரப் பேருந்துகள்

தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள நகரப் பேருந்துகள் வரும் பொங்கல் பண்டிகை முதல் சிவப்பு நிறத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Jan 2019, 2:19 am
தமிழ்நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரசு நகரப் பேருந்துகள் வரும் பொங்கல் பண்டிகை முதல் சிவப்பு வணத்திற்கு மாற்றப்பட உள்ளன. இது தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.
Samayam Tamil புதிய நிறத்திற்கு மாறும் தமிழக அரசு நகரப் பேருந்துகள்


வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சிவப்பு வண்ணப் பூச்சு கொண்ட அரசு நகரப் பேருந்துகளை போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்யவுள்ளது.

முதற்கட்ட சென்னையில் 245 சிவப்பு நிற பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. அதை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மற்ற நகரங்களில் இயங்கும் பேருந்துகளும் சிவப்பு நிறத்திற்கு மாற்றப்படவுள்ளன.


இந்த சிவப்பு சிற பேருந்திற்கான தயாரிப்பு பணிகள் கரூர், பண்ருட்டி, குரோம்பேட்டை, பொள்ளாச்சியில் உள்ள பேருந்துகள் கூண்டு கட்டும் இடங்களில் நடைபெற்று வருகின்றன.

புதிய சிவப்பு பேருந்துகள் 2-க்கு இரண்டு என்ற முறையில் நாறிழையிலான இருக்கைகள் கட்டமைக்கப்படவுள்ளன. இந்த மாடல் பேருந்துகளில் தானியங்கி கதவுகள், முன்புறம் மற்றும் பின்புறம் ஏறி, இறங்கும் வகையிலான படிக்கட்டுகள் உள்ளிட்ட பல நவீன சிறப்பம்சங்களுடன் தயாராகி வருகின்றன.

பொங்கலை முன்னிட்டு பயன்பாட்டுக்கு வரும் இந்த புதிய பேருந்து சேவையினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போக்குவரத்துறைத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி