ஆப்நகரம்

மீண்டும் தொழில்நுட்ப பிரச்சனை; 2.4 மில்லியன் ஹை-பிரிட் கார்களை திரும்பப் பெறும் டொயோடா!

டோக்கியோ: டொயோடாவின் அக்., 2008 முதல் நவ., 2014க்கு இடையில் தயாரிக்கப்பட்ட ப்ரியஸ், அவுரிஸ் ஹை-பிரிட் வாகனங்கள் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Oct 2018, 4:20 pm
ஜப்பான் நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோடா இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனது ஹை-பிரிட் கார்களில் குறிப்பிட்ட பழுது காரணமாக விபத்துகள் ஏற்படுவதால் 2.4 மில்லியன் ஹை-பிரிட் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil Toyota


கடந்த மாதம் கூறுகையில், உலகம் முழுவதும் ஒரு மில்லியன் ஹை-பிரிட் கார்களை திரும்பப் பெறுவதாக தெரிவித்தது. ஏனெனில் குறிப்பிட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக கார்கள் தீப்பிடிப்பதாக புகார்கள் எழுந்தன.

இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, அக்டோபர் 2008 மற்றும் நவம்பர் 2014க்கு இடையே தயாரிக்கப்பட்ட டொயோடா ப்ரியஸ், அவுரிஸ் ஹை-பிரிட் வாகனங்கள் திரும்ப அளிக்க வலியுறுத்தப் பட்டுள்ளது.

குறிப்பாக வட அமெரிக்காவில் 8,30,000 கார்களும், ஐரோப்பாவில் 2,90,000 கார்களும், சீனாவில் 3,000 கார்களும், எஞ்சியவை உலகின் பிற பகுதிகளில் இருந்தும் திரும்பப் பெறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஜப்பான் போக்குவரத்து துறை அமைச்சர், உள்நாட்டில் டொயோடா கார்களில் மூன்று பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் எந்தவிதமான விபத்துகளும் ஏற்படவில்லை.

கடந்த 1997ஆம் ஆண்டில் இருந்து ப்ரியஸ் உள்ளிட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான கேஸோலைன் - எலக்ட்ரிக் வாகனங்களை சர்வதேச அளவில் டொயோடா விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Toyota Announces New Recall Of 2.4 Million Hybrid Cars.

அடுத்த செய்தி