ஆப்நகரம்

சாலையில் தனியே வந்த ரயில் எஞ்சின்- பதைபதைத்த வாகன ஓட்டிகள்..!

மஹராஷ்டிராவின் மும்பை புனே விரைவுச் சாலையில் ரயில் எஞ்ஜின் ஒன்று திடீரென தோன்றியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Samayam Tamil 19 Jul 2019, 7:40 pm
ரயில் போக்குவரத்து முன்பை விட தற்போது மிகவும் பாதுகாப்பாக மாறிவிட்ட நிலையில், புனேவில் அரங்கேறிய ஒரு சம்பவம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதன்படி, அந்த மாவட்டத்தின் மும்பை - புனே விரைவுச் சாலை பகுதியிலுள்ள தண்டவாளத்தில் ரயில் எஞ்சின் ஒன்று சென்று கொண்டிருந்தது.
Samayam Tamil சாலையில் ஓடிய ரயில்வே எஞ்சின்- அலட்சியம் காட்டிய அதிகாரிகள்
சாலையில் ஓடிய ரயில்வே எஞ்சின்- அலட்சியம் காட்டிய அதிகாரிகள்


அப்போது திடீரென அந்த ரயில், தண்டவாளத்தை விட்டு சாலையில் இறங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். சாலையில் சிக்கிய ரயில் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பணிமனை ஊழியருக்கும், ரயில் எஞ்சினை இயக்கிய பைலட்டுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது நடந்த குழப்பத்தில் எஞ்சினை சாலையில் இறக்கிவிட்டுள்ளார் பைலட்.

சாலை கடந்த போது, ரயில்வே கேட் மூடப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. அங்கே இருந்த ராணுவ வீரர்கள் சிலர், ரயிலை எஞ்சினை மேலும் நகராதவாறு தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அபாயம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த உடன் ரயில்வே பைலட் அங்கியிருந்து புறப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த போது அங்கு போக்குவரத்து போலீசார் யாரும் வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே சாலையில் இறங்கியதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நிறுத்தம் மேலும் சில மணிநேரங்கள் நீடித்துள்ளது. ராணுவ வீரர்கள் தான் களத்தில் இறங்கி ரயில் எஞ்சினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தற்போது அரங்கேறியுள்ள இந்த பாதுகாப்பற்ற சம்பவம், மக்களிடையே பீதியை அடைய செய்துள்ளது. ஆனால், இதற்கு அதிகாரிகள் மற்றும் பணியில் இருந்த பைலட்டே முக்கிய காரணமாக இருக்கின்றனர். ஆகையால், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, ரயில்வே துறைசார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி