ஆப்நகரம்

மணிக்கு 150 கி.மீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார் சோதனை வெற்றி..!!

ஹைட்ரோஜன் எரிபொருளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அமெரிக்க நிறுவனம் புதிய தொழில்நுட்பத்திலான பறக்கும் காரை தயாரித்துள்ளது.

Samayam Tamil 3 Jun 2019, 6:43 pm
அமெரிக்காவைச் சேர்ந்த மாற்று தொழில்நுட்பத் தயாரிப்பில் அதிக ஈடுபாடு காட்டும் அலகா ஐ என்ற நிறுவனம் பறக்கும் காரை வடிவமைத்து அதில் வெற்றி கண்டுள்ளது. இதனால் இந்த கார் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil விரைவில் விற்பனைக்கு வரும் 5 பேர் அமரும் வகையிலான பறக்கும் கார்.
விரைவில் விற்பனைக்கு வரும் 5 பேர் அமரும் வகையிலான பறக்கும் கார்.


உலகளவில் மாற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. அந்தவகையில், அமெரிக்காவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான அலகா ஐ, புதிய பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.

ஐந்து பேர் அமர்ந்து பயணிக்கும் வகையிலான இந்த கார், குறைந்த எரிபொருள் பயன்பாட்டில், அதிகநேரம் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது முழுமையாக இதில் எரிபொருள் நிரப்பப்பட்டால் 644 கி.மீ வரை இந்த கார் பயணிக்கும்.

மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த கார், மொத்தமாக 454 கிலோ எடை கொண்டது. காரின் பயன்பாட்டில் அதிகளவில் ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அலகா ஐ டெக்னாலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல நாடுகளில் சாலை வழியில் போக்குவரத்து நெரிசல் உருவாகிவிட்டது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என போக்குவரத்து நெரிசலுக்கு எதுவும் விதிவிலக்கல்ல. இதற்கு மாற்று தொழில்நுட்பத்தை உருவாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இந்த பறக்கும் கார்.

துரித சேவை பயன்பாடு, ஆம்புலன்ஸ் போக்குவரத்து போன்ற தேவைகளுக்காக இந்த பறக்கும் கார் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலகா ஹை நிறுவனம் இந்த காரை ஹைட்ரோஜன் எரிபொருள் மூலம் இயங்கும் விதத்தில் தயாரித்துள்ளது, அதனால் இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது.

தற்போது இதற்கான சோதனை முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதிகளை பெற்றுவிட்டு, விரைவில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி