ஆப்நகரம்

பிரமாண்டமாக உருவான உலகின் முதல் மின்சார கப்பல்- இதை சார்ஜ் செய்வது எப்படி..?

மின்சார ஆற்றலுக்கு இணங்கும் வகையில் இருசக்கர வாகனங்கள், கார்கள், வர்த்தக வாகனங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், உலகின் முதல் மின்சார கப்பலை தயாரித்து பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது ஒரு நிறுவனம்.

Samayam Tamil 20 May 2020, 4:57 pm
நீர் வழிப் போக்குவரத்து தேவைக்கான ஊர்திகளும் மின்சார ஆற்றலுக்கு இணங்க தயாரிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் துவங்கியுள்ள நிலையில், உலகின் முதல் எலெக்ட்ரிக் கப்பல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil உலகின் முதல் மின்சார கப்பல்
உலகின் முதல் மின்சார கப்பல்


பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார ஆற்றலில் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்காக உலக நாடுகள் பலவும், மின்சார வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியங்களை அறிவித்து வருகின்றன.

இந்திய அரசும் எலெக்ட்ரிக் வகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு மானியங்களை அறிவித்துள்ளது. அதேபோல வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும், மானியங்களையும் அறிவித்துள்ளது.

Read more: சொந்த நாட்டிலேயே அகதி போல டாடா நானோ காரில் வாழ்ந்து வரும் இளைஞர்..!

எனினும், இன்னும் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக சந்தை உருவாகவில்லை. அதற்கான கட்டமைப்பு இன்னும் ஆரம்பநிலையிலே உள்ளது. ஆனால் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றன.

அதற்காக சார்ஜிங் நிலையங்கள் கட்டமைப்பதற்கான பணிகளில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மக்கள் கூடும் பகுதிகள், நல்ல இடவசதி கொண்ட இடங்களில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நீரவழிப் பாதைகளிலும் மின்சார வாகனங்களை இயக்குவதற்கான செயல்பாடுகள் துவங்கியுள்ளன. அதற்காக மின்சார ஆற்றலில் இயங்கக்கூடிய கப்பலை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More: நெருக்கடியான இடத்தில் ’நேக்காக’ பார்க் செய்யப்பட்ட கார்- ஆனந்த் மஹிந்திரா பாராட்டு...!

கடந்தாண்டு ஜப்பானைச் சேர்ந்த ‘அசாஹி டேங்கர்’ என்கிற நிறுவனம் மின்சார ஆற்றலில் இயங்கக்கூடிய கப்பலை உருவாக்குவதாக தெரிவித்தது. தற்போது மின்சார ஆயில் டேங்கர் இ5 கப்பல் குறித்த வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவொரு ப்ரொஜெக்ட் வீடியோவாகும்.

அந்த வீடியோவில், சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இந்த கப்பல் உருவாக்கவுள்ளதாகவும். இந்த இ5 மின்சார கார் 2021ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மின்சார ஆற்றல் கொண்ட முதல் கப்பல் குறித்து வெளியாகியுள்ள தகவல் பலரையும் பிரம்மிப்பு அடையச் செய்துள்ளது. அதனால், இந்த காரினுடைய பேட்டரி எப்படி இருக்கும், அதை எப்படி சார்ஜ் செய்வது குறித்த தகவல்களை பலரும் தேடி வருகின்றனர்.

Read More: இன்னோவா முதல் மெர்சிடிஸ் வரை- நடிகை மாதுரி திக்‌ஷித்தின் கார் கலெக்‌ஷன்..!

அதற்கான தகவல்களும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, கப்பலில் பொருத்துவதற்காக பேட்டரியை தயாரிப்பு நிறுவனமே உருவாக்கியுள்ளது. மேலும் இயற்கை முறையில் மின்சாரம் பெரும் விதமாகவும் சிறியளவிலான மின் நிலையமும் கப்பலில் அமையவுள்ளது.

இந்த வசதிக்காக தனி சோலார் பிளாணட் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி மையங்களை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி வருவதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸெனோ யமாமிஸுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆசாஹி டேங்கர் நிறுவனம் இந்த மின்சார கப்பலை உருவாக்கி வருகிறது.

மேலும் இவ்விரு நிறுவனங்களுடன் மிட்சுபிஷி நிறுவனம் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதன்படி, மின்சார கார்களை இயக்குவதற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கருவிகளை, மின்சார கப்பல் தயாரிப்புக்காக வழங்கியுள்ளது மிட்சுபிஷி நிறுவனம்.

இம்மூன்று கூட்டணியில் உருவாகும் கப்பல் டேங்கர் கப்பலாகவே தயாரிக்கபப்டவுள்ளது. அதன்படி, ஆயில்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது போன்ற பணிகளில் இந்த மின்சார கப்பல் ஈடுபடுத்தப்படும். இந்த மின்சார கப்பலில் 3,500 kWh திறன் கொண்ட பேட்டரிகள் பொருத்தப்பட இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு எத்தனை நேரம் ஆகும் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. தற்போது மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய பல மணிநேரம் தேவைப்படுகிறது. அதை விட பலமணி நேரத்தில் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.

இந்த கப்பலில் 5ஜி வேகன் இணைய சேவை, 360 டிகிரி வளைந்து சுழலும் திரஸ்டுகள் வழங்கப்படவுள்ளன. இந்த மின்சார கப்பல் மணிக்கு 20.3 கி.மீ வேகத்தில் செல்லும். இதனுடைய டேங்கரில் 499 டன் வரை சரக்குகளைக் ஏற்றிச் செல்ல முடியும் என்று தயாரிப்பு நிறுவனமான ஆசாஹி கூறியுள்ளது.

அடுத்த செய்தி