ஆப்நகரம்

உஷார்! பைக்கில் வேகமாகச் சென்றால் எஸ்எம்எஸ் மூலம் புகார் போகும்

பைக்கில் வேகமாகச் சென்றால் தானாகவே எஸ்எம்எஸ் மூலம் புகார் அளிக்கும் நவீன தொழில்நுட்பத்தை ஐந்து பொறியில் மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

Gadgets Now 29 Apr 2017, 3:26 pm
பைக்கில் வேகமாகச் சென்றால் தானாகவே எஸ்எம்எஸ் மூலம் புகார் அளிக்கும் நவீன தொழில்நுட்பத்தை ஐந்து பொறியில் மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
Samayam Tamil be in your speed limits or parents will get sms
உஷார்! பைக்கில் வேகமாகச் சென்றால் எஸ்எம்எஸ் மூலம் புகார் போகும்


கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஹனுமந்த நகரில் உள்ள பி.இ.எஸ். கல்லூரி மாணவர்கள் பைக்கில் அதிவேகமாகச் சென்றால் தானாகேவே மெசேஷ் அனுப்பி புகார் தெரிவிக்கும் கருவியை வடிவமைத்துள்ளனர்.

இறுதி ஆண்டு ஆட்டோமொபைல் பட்டையப் படிப்பு படிக்கும் அக்ஷய், அமிதேஷ்,கிரிஷ், திலீப் மற்றும் சுஹான்ஸ் ஆகிய ஐந்து மாணவர்கள் இந்த கருவியை வடிவமைத்துள்ளனர். இதனை இருசக்கர வாகனங்களில் பொருத்தினால், வேக எல்லையைக் கடக்கும்போது உடனடியாக எஸ்எம்எஸ் மூலம் புகார் சென்றுவிடும். ப்ரேக் டவுண் ஆகும்போதும், எஞ்சின் கோளாறு ஏற்படும் போதும் கூட எஸ்எம்எஸ் அலர்ட் அனுப்பப்படும்.

பெற்றோர் தங்கள் இளவட்ட பிள்ளைகளுக்கு பைக் வாங்கிக்கொடுத்துவிட்டு வேகமாகச் செல்வது பற்றிக் கவலைபட்டுக்கொண்டிருக்க அவசியமில்லை. இந்த கருவியில் பெற்றோர் தங்களது மொபைல் எண்ணை பதிவுசெய்துவிட்டால் அந்த எண்ணுக்கு அத்தனை மெசேஜ்களும் வந்துவிடும்.

ஜியோ சென்சார் தொழில்நுட்பத்தின் மூலம் குறிப்பிட்ட வேகத்தைக் கடப்பதை அறியும் இந்த கருவி உடனடியாக எஸ்எம்எஸ் அனுப்பிவிடும். இந்த கருவியை போக்குவரத்துக் காவல்துறைக்கு தகவல் அனுப்பும் வகையில் மேம்படுத்தவும் முடியும். அதையே தங்கள் அடுத்த கட்ட முயற்சியாக செய்யவுள்ளதாக அந்த இளம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி