ஆப்நகரம்

''கைக்கு வந்த வடை வாய்க்கு போகல'': விஜயகாந்த் வருத்தம்

''வடை கொடுத்தாங்க. வாயில வைக்கும்போது, கீழே விழுந்துருச்சு. அந்த லட்சணத்தில் ரோடு இருக்குது. என்னால இவ்வளவுதான் பேச முடியும், மீதிய பிரேமலதா வந்து விரிவா பேசுவாங்க...''என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூபேட்டையில் பேசி மக்களை சிரிக்க வைத்துள்ளார்.

TOI Contributor 10 May 2016, 6:28 pm
''வடை கொடுத்தாங்க. வாயில வைக்கும்போது, கீழே விழுந்துருச்சு. அந்த லட்சணத்தில் ரோடு இருக்குது. என்றும் என்னால இவ்வளவுதான் பேச முடியும், மீதிய பிரேமலதா வந்து விரிவா பேசுவாங்க...''என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூபேட்டையில் பேசி மக்களை சிரிக்க வைத்துள்ளார்.
Samayam Tamil because of road condition i couldnt eat vada in the van it fell down vijayakant
''கைக்கு வந்த வடை வாய்க்கு போகல'': விஜயகாந்த் வருத்தம்


விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்றால், எதாவது உருப்படியா கூறுவார் என்ற எதிர்பார்ப்பெல்லாம் பொய்த்துவிட்டது. பேசிக் கொண்டே இருக்கும்போது, கூட்டத்தினரை கட்டுப்படுத்துவது, மிரட்டுவது, காமெடி செய்வது என்று அந்த நேரத்தில் தோன்றுவதை செய்து கொண்டு இருக்கிறார்.

அவரது சொந்த தொகுதியான உளுந்தூர்பேட்டை தொகுதி பிரச்சாரத்தில் விஜயகாந்த் பேசுகையில், ''வேனில் வரும்போது எனக்கு சாப்பிட வடை கொடுத்தார்கள். வாயில வைக்கும்போது கீழே விழுந்துருச்சு. அந்த லட்சணத்தில் ரோடு இருக்குது'' என்றார்.

மேலும், ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, ''நான் இவ்வளவுதான் பேசுவேன். இதுக்கு மேல, பிரேம லதா வந்து விரிவா பேசுவாங்க'' என்று கூறி சென்றார்.

அடுத்த செய்தி