சென்னை: பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அக்கட்சி தொடங்கியுள்ளது.
இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், புதிய நீதிகட்சி உள்ளிட்ட பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளன.
முன்னதாக, இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை, வானதி ஸ்ரீநிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை பாஜக தங்களது கூட்டணிக்கு இழுக்க முயன்றது. ஆனால், அக்கட்சியின் முயற்சி தோல்வியடைந்தது என்பது கவனிக்கத்தக்கது.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அக்கட்சி தொடங்கியுள்ளது.
இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், புதிய நீதிகட்சி உள்ளிட்ட பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளன.
முன்னதாக, இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை, வானதி ஸ்ரீநிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை பாஜக தங்களது கூட்டணிக்கு இழுக்க முயன்றது. ஆனால், அக்கட்சியின் முயற்சி தோல்வியடைந்தது என்பது கவனிக்கத்தக்கது.