ஆப்நகரம்

பூத் சிலிப்புகள் பறிமுதல்

மதுரை மாவட்டம் நாகமலைப்புதுக்கோட்டை அருகே தேர்தலுக்கான பூத் சிலிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

TNN 5 May 2016, 9:12 am
மதுரை: மதுரை மாவட்டம் நாகமலைப்புதுக்கோட்டை அருகே தேர்தலுக்கான பூத் சிலிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil booth silps seized near madurai
பூத் சிலிப்புகள் பறிமுதல்


தமிழகத்தில் இம்மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி சென்னையில் உள்ள வாக்காளர்களுக்கு இன்று பூத் சிலிப்புகள் வழங்கப்படுகிறது. வீடு வீடாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் வாக்களர்களை சந்தித்து பூத் சிலிப்புகளை வழங்குவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பூத் சிலிப்புகளை பெற்ற வாக்காளர்கள் ஒப்புகை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மதுரை அருகே அதிமுக சின்னம் பதிக்கப்பட்ட 10 லட்சம் பூத் சிலிப்புகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். காரில் கொண்டு செல்லப்பட்ட இந்த பூத் சிலிப்புகளை பறிமுதல் செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி