மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள 2017 பட்ஜெட் அறிக்கையில், செல்ஃபோன் தயாரிப்பாளர்களுக்குச் சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் என அனைத்தையும் ஒன்று சேர்த்த அறிக்கையை, நிதியமைச்சர் அருண் ஜேட்லீ தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் அறிக்கையில் எத்தகைய அறிவிப்புகள் இடம்பெறலாம் என பலரிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன்படி, செல்ஃபோன் தயாரிப்பாளர்களுக்குச் சில சலுகைகள் வழங்கப்படுமா என, அத்துறையில் உள்ள உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், பல்வேறு தொழில் உற்பத்தியாளர்களையும் மத்திய அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது.
எனினும், செல்ஃபோன் தயாரிப்பாளர்களுக்கு, ஏற்றுமதி தொடர்பான வரி விதிப்புகள் ஏற்கும்படியாக இல்லை. மேலும், தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பான விதிமுறைகளும் அதிருப்தி அளிப்பதாக உள்ளன.
செல்ஃபோன் நிறுவனங்கள், தங்களது கழிவுப்பொருட்களை மறு சுழற்சி செய்யவும் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இவற்றை கருத்தில்கொண்டு, பட்ஜெட் அறிக்கையில் சலுகை அறிவிப்புகள் இடம்பெறுமா எனவும் அந்நிறுவனங்கள் கேள்வி எழுப்புகின்றன.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்ஃபோன்களுக்கு, 12.5% வரி விதிக்கப்படுகிறது. இதன்காரணமாக, உள்நாட்டிலேயே செல்ஃபோன் தயாரிப்பை ஊக்குவிப்பதால், சென்ற ஆண்டில் மட்டும் ரூ.54,000 கோடி மதிப்புடைய ஃபோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது வரும் நிதியாண்டில், ரூ.94,000 கோடி மதிப்புடையதாக உயர வாய்ப்புள்ளது.
இதேபோன்று, உள்நாட்டைச் சேர்ந்த செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்த உதவும்படி, அந்நிறுவனங்கள் கோரிக்கை எழுப்பியுள்ளன. இதுதொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறும் என நிதியமைச்சக வட்டாரங்களும் குறிப்பிட்டுள்ளன.
Handset makers operating in India expect the government to continue duty differential regime for mobile phones in the upcoming budget, amid business slowdown due to demonetisation and the imminent implementation of goods and service tax (GST) regime.
ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் என அனைத்தையும் ஒன்று சேர்த்த அறிக்கையை, நிதியமைச்சர் அருண் ஜேட்லீ தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் அறிக்கையில் எத்தகைய அறிவிப்புகள் இடம்பெறலாம் என பலரிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன்படி, செல்ஃபோன் தயாரிப்பாளர்களுக்குச் சில சலுகைகள் வழங்கப்படுமா என, அத்துறையில் உள்ள உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், பல்வேறு தொழில் உற்பத்தியாளர்களையும் மத்திய அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது.
எனினும், செல்ஃபோன் தயாரிப்பாளர்களுக்கு, ஏற்றுமதி தொடர்பான வரி விதிப்புகள் ஏற்கும்படியாக இல்லை. மேலும், தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பான விதிமுறைகளும் அதிருப்தி அளிப்பதாக உள்ளன.
செல்ஃபோன் நிறுவனங்கள், தங்களது கழிவுப்பொருட்களை மறு சுழற்சி செய்யவும் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இவற்றை கருத்தில்கொண்டு, பட்ஜெட் அறிக்கையில் சலுகை அறிவிப்புகள் இடம்பெறுமா எனவும் அந்நிறுவனங்கள் கேள்வி எழுப்புகின்றன.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்ஃபோன்களுக்கு, 12.5% வரி விதிக்கப்படுகிறது. இதன்காரணமாக, உள்நாட்டிலேயே செல்ஃபோன் தயாரிப்பை ஊக்குவிப்பதால், சென்ற ஆண்டில் மட்டும் ரூ.54,000 கோடி மதிப்புடைய ஃபோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது வரும் நிதியாண்டில், ரூ.94,000 கோடி மதிப்புடையதாக உயர வாய்ப்புள்ளது.
இதேபோன்று, உள்நாட்டைச் சேர்ந்த செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்த உதவும்படி, அந்நிறுவனங்கள் கோரிக்கை எழுப்பியுள்ளன. இதுதொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறும் என நிதியமைச்சக வட்டாரங்களும் குறிப்பிட்டுள்ளன.
Handset makers operating in India expect the government to continue duty differential regime for mobile phones in the upcoming budget, amid business slowdown due to demonetisation and the imminent implementation of goods and service tax (GST) regime.