ஆப்நகரம்

வங்கியில் கடன் பெற்று ஏமாற்றி வெளிநாட்டிற்க்கு சென்றால் சொத்துக்கள் பறிமுதல் - அருண் ஜெட்லி

பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

TNN 1 Feb 2017, 5:09 pm
புதுடெல்லி: பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
Samayam Tamil budget 2017 new law confiscate assets economic offenders
வங்கியில் கடன் பெற்று ஏமாற்றி வெளிநாட்டிற்க்கு சென்றால் சொத்துக்கள் பறிமுதல் - அருண் ஜெட்லி


வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டில் பதுங்கியுள்ள விஜய் மல்லையா போன்ற பண முதலைகளுக்கு பாடம் கற்பிக்கும் விததில், புதிய சட்டம் இயற்றப்படும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இன்று 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இந்த பட்ஜெட் உரையின் போது வங்கிகளில் பணம் பெற்று அதை திரும்பச் செலுத்தாமல் பலர் வெளிநாடுகளுக்கு செல்ல முற்படுகின்றனர். அவ்வாறு பணத்தை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு சென்று தங்கி விட்டால், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்படும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்

அதேபோல் வேளாண் விளைப் பொருட்களின் முன்பேர வர்த்தகத்தை முறைப்படுத்தவும், இந்தியாவில் அன்னிய முதலீடு செய்வதில் நடைமுறை எளிமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் உறவு, சமூக பாதுகாப்பு உட்பட தொழிலாளர் சட்டத்தை 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்