ஆப்நகரம்

ஊரடங்கு தளர்வு: விமானத்தில் பறந்த 19 லட்சம் பேர்!

உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு அனுமதி கிடைத்த பிறகு ஒரு மாதத்தில் 19 லட்சம் பேர் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Samayam Tamil 26 Jun 2020, 7:16 pm
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். பேருந்து, ரயில் விமானம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. கொரோனா பாதிப்புகள் நீடித்ததால் அதன் பின்னரும் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டது. விமானப் போக்குவரத்துச் சேவையைப் பொறுத்தவரையில், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் சரக்கு விமானங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் உள்நாட்டினருக்கான சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
Samayam Tamil flight


ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மே 25ஆம் தேதி முதல் குறிப்பிட்ட அளவில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. மே 25 முதல் ஜூன் 25 வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் உள்நாட்டு விமானங்களில் மொத்தம் 18.9 லட்சம் பயணிகள் விமானப் பயணம் மேற்கொண்டதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். மொத்தம் 21,316 விமானங்களில் இவர்கள் பயணம் செய்துள்ளனர். அதாவது, சராசரியாக ஒரு விமானத்துக்கு 90 பேர் என்ற அளவில் பயணம் செய்துள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை: ரயில்வே அறிவிப்பு!

வழக்கமாக கோடைக் காலத்தில் இயக்கப்படும் விமானங்களில் மூன்றில் ஒரு பங்கு அளவு விமானங்கள் மட்டுமே இந்த ஆண்டில் இயக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள் சார்பில் அந்தந்த விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு, பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகளும் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. முந்தைய 2018, 2019 ஆண்டுகளில் இக்காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் கொரோனாவால் இச்சூழல் ஏற்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்