ஆப்நகரம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? பட்ஜெட்டில் வருமா நல்ல செய்தி?

மத்திய பட்ஜெட்டில் 8ஆவது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அது நடந்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக உயரும்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 30 Jan 2023, 1:47 pm
இன்னும் ஓரிரு நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு வகுப்பினருக்கும் அதில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. அதே சமயம் அரசு ஊழியர்களுக்கும் இந்த பட்ஜெட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்த பட்ஜெட்டில் நிறைவேற வாய்ப்பு உள்ளது. இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்.
Samayam Tamil budget


8வது ஊதியக் குழு அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. அதன்படி, 2023ஆம் ஆண்டில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டால், 2026ஆம் ஆண்டில் அதன் பரிந்துரைகள் அமலுக்கு வரலாம். இதையடுத்து அரசு ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கும்.

2023-24 பட்ஜெட்டில் 8வது ஊதியக்குழு தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடலாம் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். இது நடந்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். சம்பள கமிஷன் பரிந்துரையை அரசு அமல்படுத்தினால், கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் சம்பளம் உயரும்.

அரசு ஊழியர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் கொண்டு வரப்படுகிறது. தற்போது வரை 5, 6 மற்றும் 7வது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்த அதே முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், 2023ஆம் ஆண்டில் 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2026ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு அதிக பணம் கிடைக்குமா? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!
இது தற்போதைய மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட்டாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பட்ஜெட்டை ஒவ்வொரு பிரிவினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றனர். எனவே அரசு ஊழியர்களுக்கும் இந்த பட்ஜெட் மிகவும் சிறப்பானதாக அமையலாம். 2024ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இவ்வாறான நிலையில், இந்த பட்ஜெட் ஜனரஞ்சகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசு ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரையில், அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகை தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்தனர். கொரோனா பிரச்சினை வந்ததால் அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்பட்டன.

கஷ்ட காலம்பா.. வேலை இழப்பு.. வருமானம் குறைவு.. பட்ஜெட்டை நம்பி இருக்கும் இந்திய குடும்பங்கள்!
அகவிலைப்படி போன்ற அறிவிப்புகள் சற்று தாமதாமவே வந்தன. அதேபோல, சம்பளக் கணக்கீட்டில் ஃபிட்மெண்ட் காரணி உயர்வுக்கும் அவர்கள் காத்திருக்கின்றனர். இதுபோன்ற சூழலில் 8ஆவது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்