ஆப்நகரம்

PPF திட்டத்தில் அதிக முதலீடு.. எப்படி இருக்கும் மத்திய பட்ஜெட்?

பிபிஎஃப் திட்டத்துக்கான முதலீட்டு வரம்பை உயர்த்துவதற்கான அறிவிப்பு 2023 மத்திய பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 27 Jan 2023, 3:09 pm
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது ஒரு நல்ல முதலீட்டு வழியாகும். இதில் முதலீடு செய்யப்படும் பணம் முற்றிலும் பாதுகாப்பானது. இந்த முதலீட்டுக்கு நல்ல வட்டி கிடைப்பதுடன் வரியும் மிச்சமாகும். பிபிஎஃப் முதலீட்டு வரம்பை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த நிதியமைச்சரிடம் நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பிபிஎப்பில் முதலீடு செய்தால் ரூ.1.5 கோடி வரை கைக்கு வரும். இந்த முதலீட்டின் மூலம் அதிகபட்ச வட்டியைப் பெற்றுத் தொகையை அதிகரிக்கலாம்.
Samayam Tamil nirmala


1.5 கோடி பெறுவது எப்படி?

PPF கணக்கில் நீங்கள் அதிகபட்சம் 1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் PPF திட்டத்தில் 12,500 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், உங்கள் PPF கணக்கை 15 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு 5-5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பிபிஎஃப் கணக்கில் 1.5 கோடி (1,54,50,911) இருக்கும். இதில் உங்கள் முதலீடு ரூ.45 லட்சமாக இருந்தால், வட்டி வருமானம் சுமார் ரூ.1.09 கோடியாக இருக்கும்.

25 வயதில் முதலீடு:

PPF திட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு பலன்களைப் பெற முடியும். 25 வயது இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு 1.5 லட்சத்தை PPF திட்டத்தில் முதலீடு செய்தால், அவர் 55 வயதில் அதாவது ஓய்வு பெறும் நேரத்தில் கோடீஸ்வரராகலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? பட்ஜெட்டில் வருமா நல்ல செய்தி?
வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

PPF திட்டத்தில் மாதாந்திர அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்தப் பணம் நிதியாண்டின் இறுதியில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது, ஒவ்வொரு மாதமும் சம்பாதித்த வட்டி மார்ச் 31 அன்று பிபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

டெபாசிட் விதிமுறை!

மாதத்தின் 5ஆம் தேதி வரை PPF கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டால், அதே மாதத்தில் அந்த பணத்திற்கு வட்டி கிடைக்கும். ஆனால் 5 அல்லது 6வது நாளுக்குப் பிறகு பணத்தை டெபாசிட் செய்தால், அடுத்த வைப்புத் தொகைக்கு வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பு.. விவசாய துறைக்கு என்ன கிடைக்கும்?
பட்ஜெட் எதிர்பார்ப்பு!

மத்திய பட்ஜெட் 2023 இன்னும் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த பட்ஜெட் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. பல்வேறு துறையினர் தங்களது எதிர்பார்ப்புகளையும் கோரிக்கையையும் வைத்து வருகின்றனர். இந்நிலையில், பிபிஎஃப் திட்டத்துக்கான முதலீட்டு வரம்பு 3 லட்சமாக உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்