ஆப்நகரம்

Budget 2019 for Housing: 2022க்குள் தகுதி உடையவர்களுக்கு 1.95 கோடி வீடுகள்: சீதாராமன் அறிவிப்பு!!

நாட்டின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் 1.95 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Samayam Tamil 5 Jul 2019, 12:20 pm

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறுகையில், ''நாட்டின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் வசிக்கும் தகுதி உடைய அனைத்து மக்களுக்கும் 1.95 கோடி வீடுகள் வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் பிரதமர் மந்திரி அவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் கட்டித் தரப்படும். கடந்த 2015-16 ஆம் ஆண்டில் வீடு கட்ட 315 நாட்கள் தேவைப்பட்டது. இது வரும் 2022ஆம் ஆண்டில் 114 நாட்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Nirmala 2

Budget Live Updates: விவசாயிகள் மேம்பாட்டிற்கு 10,000 புதிய அமைப்புகள் - நிர்மலா சீதாராமன் அதிரடி!
இதற்கான நிதி மத்திய அரசின் பத்திரங்கள் வழியாக குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதேபோல் கடந்த 2018-2019 ஆம் ஆண்டில் 51 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து இருந்தார்.
பட்ஜெட் தயாரிப்பில் நடந்த "மினி பிக்பாஸ்"; பட்ஜெட் குறித்த சுவாரசிய தகவல்கள்
மேலும் அவர் பேசுகையில், ''நாட்டில் வரும் 2019 அக்டோபருக்குள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாற்றப்படும். வீடுகளுக்கு தண்ணீர் வழங்க ஹர் கர் ஜல் திட்டம் கொண்டு வரப்படும். கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு வீடும் மின்சாரம், காஸ் இணைப்பு நிறைவு பெற்றதாக மாற்றப்படும். ஆரோக்கியமான உணவு சமைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்'' என்றார்.
Union Budget 2019: பாரம்பரிய கைப்பையில் பட்ஜெட் ரெடி! நிர்மலா சீதாராமன் அதிரடி

அடுத்த செய்தி

டிரெண்டிங்