ஆப்நகரம்

தானாக உயரும் எம்.பி.க்களின் சம்பளம்!

மத்திய பட்ஜெட் 2018-19ல் எம்.பி.க்களுக்கான சம்பளத்தைத் தொடர்ச்சியாக உயர்த்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Feb 2018, 9:30 am
மத்திய பட்ஜெட் 2018-19ல் எம்.பி.க்களுக்கான சம்பளத்தைத் தொடர்ச்சியாக உயர்த்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil budget 2018 mps salary hike put on auto mode
தானாக உயரும் எம்.பி.க்களின் சம்பளம்!


மத்திய பட்ஜெட் 2018-19ஐ நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் ரூ.5 லட்சமாகவும் துணைக் குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் ரூ.4 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. முன்னதாக குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஆகியோர் முறையே ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.1.10 லட்சம் மாத ஊதியம் பெற்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் (எம்.பி.) சம்பளத்தை உயர்த்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எம்.பி.க்களின் சம்பளம் உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரூ.50,000 மாதச் சம்பளம் பெறும் எம்.பி.க்கள் வரும் ஏப்ரல் மாதம் முதல் ரூ.1,00,000 லட்சம் வரை ஊதிய உயர்வு பெறுவார்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இது தவிர மாதம் தோறும் ரூ.45,000 தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு எம்.பிக்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. ​ சம்பளம் தவிர தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தங்குமிடம் போன்ற வசதிகளும் அவர்களுக்குக் கிடைக்கிறது.

தற்போதைய நிலையில் மத்திய அரசு மாதம் தோறும் ஒரு எம்.பி.க்கு ரூ.2.7 லட்சம் தொகையை செலவிடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்