இன்றைய பட்ஜெட்டில் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு வரி விலக்கு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தந்திர அறிவிப்புக்கு விடை கிடைக்காமல் மக்கள் குழம்பி உள்ளனர். அதாவது, ரூ. 5 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு வருமான வரி கிடையாது. ஆனால், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட Income Tax Slab முறையில் எந்த மாற்றமும் இல்லை. ரூ. 5 லட்சத்தை வருமானம் தாண்டும்போது, பழைய Slab முறையில் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வருமான வரி செலுத்த வேண்டும். வருமானம் ரூ. 5,00,000ல் இருந்து ரூ. 10,00,000ஆக அதிகரிக்கும்போது 20% வரி செலுத்த வேண்டும். ரூ. 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வரியில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரை எந்த மாற்றமும் இல்லை.
அதேசமயம் ரூ. 6.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் தங்களது வருமானத்தை பிஎப், சில வருமான வரி சேமிப்புகள், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்யும்பட்சத்தில் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருமான வரி விலக்கால் மொத்தம் 3 கோடி பேர் பயனடைவார்கள் என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும் நிரந்தரக் கழிவு ரூ. 40,000ல் இருந்து ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தபால் நிலையத்தில் ரூ. 10,000 வரை பணம் டெபாசிட் செய்தால் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இது தற்போது ரூ. 40000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பில் தெளிவு இல்லாததால் வரி செலுத்துவோர் குழப்பத்தில் உள்ளனர்.
அதேசமயம் ரூ. 6.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் தங்களது வருமானத்தை பிஎப், சில வருமான வரி சேமிப்புகள், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்யும்பட்சத்தில் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருமான வரி விலக்கால் மொத்தம் 3 கோடி பேர் பயனடைவார்கள் என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும் நிரந்தரக் கழிவு ரூ. 40,000ல் இருந்து ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தபால் நிலையத்தில் ரூ. 10,000 வரை பணம் டெபாசிட் செய்தால் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இது தற்போது ரூ. 40000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பில் தெளிவு இல்லாததால் வரி செலுத்துவோர் குழப்பத்தில் உள்ளனர்.