ஆப்நகரம்

பட்ஜெட் 2020: பால் உற்பத்தியைப் பெருக்கத் திட்டம்!

இந்தியாவின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக 2020-21 பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Feb 2020, 3:48 pm
2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பால் உற்பத்தி அளவை இரு மடங்கு வளர்ச்சியுடன் 108 மில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பால் வளத் துறைக்கும் கால்நடை வளர்ப்புத் துறைக்கும் இந்த ஆண்டில் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதற்கு அமுல் உள்ளிட்ட பால் உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
Samayam Tamil பட்ஜெட் 2020_ பால் உற்பத்தியைப் பெருக்கத் திட்டம்


இதுகுறித்து அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஆர்.எஸ்.சோதி பேசுகையில், “வெள்ள பாதிப்பு சமயத்திலும் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது பால் வளத் துறைக்குப் பெரிதும் உதவியது. தற்போதைய பட்ஜெட் அறிவிப்பின் மூலமாகப் பால் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். இத்துறையில் முதலீடுகளும் வருவாயும் அதிகரிக்கும். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் பால் உற்பத்தியை 10 முதல் 15 சதவீதம் வரையில் உயர்த்த முடியும்” என்றார்.

பொருளாதார வளர்ச்சி: பட்ஜெட்டில் சொன்னது நடக்குமா?

செயற்கை கருவூட்டல் மூலமாகக் கால்நடைகளின் எண்ணிக்கையை 30 முதல் 70 சதவீதம் வரையில் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கால்நடைத் தீவன வளர்ப்புத் திட்டத்தின் மூலமாகத் தீவனப் பண்ணைகளை மேம்படுத்தி, பால் உற்பத்தியைப் பெருக்கலாம் என அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பட்ஜெட் அறிவிப்பு மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் எனவும் அமுல் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்: அனுராக் தாகூர்

பட்ஜெட் அறிவிப்பு குறித்து கனக்தாரா அக்ரிகல்ச்சர் இன்னோவேசன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜகதீஷ் சுங்கத் பேசுகையில், “பால் வளத் துறை மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையைப் பலப்படுத்தினால் இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். இதன்மூலம், சாண உற்பத்தி அதிகரித்து அதன் மூலம் உரம் பயன்பாடும் அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்