ஆப்நகரம்

Budget 2021: இவங்க எல்லாம் செம சலுகைகளை எதிர்பார்க்கலாம்!

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில், கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்த ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 Jan 2021, 4:40 pm
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கொரோனா காலகட்டத்துக்கு பின் வரும் முதல் பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Samayam Tamil Money


கொரோனா காலகட்டத்தில் இந்தியா முழுக்க ஏராளமான ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலைசெய்தனர் (work from home). இந்நிலையில், வீட்டில் இருந்தே வேலை செய்த ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு, குறிப்பாக வீட்டில் இருந்தே வேலை செய்வதர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க அரசு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்தே வேலை செய்த காலத்தில் ஊழியர்களுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவுகளை சமாளிக்கும் வகையில் வரிச் சலுகைகளை வழங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மார்க்கெட்டில் தேவையை உருவாக்க தனிநபர்கள் கையில் பணத்தை கொடுக்க வேண்டியது அவசியம். எனவே, வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலம் ஊழியர்களால் மாதம் சில ஆயிரம் ரூபாயை சேமிக்க முடியும். ஒட்டுமொத்த பார்வையில் இது பொருளாதாரத்துக்கு உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

கொரோனா கோரதாண்டவத்தால் உருவான பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் ஊழியர்களுக்கு இதுபோன்ற வரிச் சலுகைகள் பெரிதும் உதவும். எனவே, ஊழியர்களுக்கான work from home வரிச் சலுகைகளை பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்