ஆப்நகரம்

கிரிப்டோகரன்சிக்கு 30 சதவீத வரி.. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!

கிரிப்டோகரன்சிகள் மீது 30 சதவீத வரிகள் விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Feb 2022, 1:20 pm
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்த நிதியமைச்சர், இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடுகளுக்கு 30 சதவீத வரிகள் விதிக்கப்படும் எனவும், கிரிப்டோ முதலீடுகளுக்கு எந்தவொரு வரிச்சலுகைகளும் கிடையாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
Samayam Tamil crypto tax


வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 2(14) இன் கீழ், கிரிப்டோகரன்சிகளை வரி செலுத்துவோர் முதலீடுகளுக்காக வாங்கினால், மூலதனச் சொத்துகளாகக் கருதப்படும். எனவே, கிரிப்டோகரன்சியின் பரிமாற்றத்தில் வரும் எந்தவொரு லாபத்துக்கும் மூலதன ஆதாயங்களுக்கும் வரி விதிக்கப்படும். மேலும் கிரிப்டோகரன்சிகளை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கும் வரிகள் விதிக்கப்படும் என நிர்மலா அறிவித்துள்ளார்.


அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்படும் என கூறப்பட்ட CBDC என்ற மெய்நிகர் நாணயம் 2022-23 ஆண்டுக்குள் கொண்டுவரப்படும் என நிர்மலா கூறியிருந்தார். மேலும் கிரிப்டோகரன்சி முதலீடுகள் மீது எந்தவொரு வரிச்சலுகைகளும் வழங்கப்படாது எனவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்திய கிரிப்டோ முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிஜிட்டல் கரன்சி வெளியிடும் ரிசர்வ் வங்கி: பட்ஜெட்டில் நிர்மலா பளிச்!
கிரிப்டோகரன்சிகளுக்கு அரசாங்கம் அதிக வரி விகிதத்தை அறிவித்துள்ளது. மேலும் லாட்டரி, கேம் ஷோ போன்றவற்றின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கும், கிரிப்டோகரன்சி விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
கிரிப்டோகரன்சி சந்தை மிகவும் நிலையற்றது; நிச்சயமற்றது.

நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வதைத் தடுக்க, கிரிப்டோகரன்சி விற்பனையில் ஏற்படும் இழப்பிற்கு அரசு எந்த விதத்திலும் பொறுப்பாகாது. அவற்றை வேறு எந்த வருமானத்திற்கும் எதிராக சரிசெய்யவும் அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்