ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு வரி விலக்கு உயர்வு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

அரசு ஊழியர்களுக்கு பென்சன் திட்டத்தில் அரசு பங்களிப்புக்கான வரி விலக்கு விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது...

Samayam Tamil 2 Feb 2022, 5:18 pm
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நேற்று தொடங்கியது. அதன்படி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.
Samayam Tamil Nirmala Sitharaman


இந்நிலையில், 2022 - 2023 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை காலை 11 மணி அளவில் தொடங்கினார். இது அவர் தாக்கல் செய்த 4வது பட்ஜெட் ஆகும்.

மாநில அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (National Pension System) அரசு தரப்பு பங்களிப்புக்கான (Employer contribution) வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுவதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்: சீனியர் சிட்டிசன்களுக்கு சூப்பர் வசதி.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
இதன்படி, தேசிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான அரசின் பங்களிப்புக்கான வரி விலக்கு வரம்பு 10 விழுக்காட்டில் இருந்து 14 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் இருவருக்குமே பொருந்தும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் இரு தரப்பினருக்கு சமூக பாதுகாப்பு பலன்கள் சமமாக கிடைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் அறிவிப்பாக வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்