ஆப்நகரம்

கடன் தள்ளுபடி கோரும் விவசாயிகளுக்கு மாதம் ரூ. 500 வழங்கப்படுவது நியாயமா?

விவசாயிகளுக்கு மாதம் ரூ. 500 வழங்கினால், அவர்கள் அதை வைத்து கௌரவமாக வாழ முடியுமா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 1 Feb 2019, 3:23 pm
விவசாயிகளுக்கு மாதம் ரூ. 500 வழங்கினால், அவர்கள் அதை வைத்து கௌரவமாக வாழ முடியுமா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil விவசாயிகள் கோரிக்கைக்கு மாற்றானது பட்ஜெட் அறிவிப்பு- சசி தரூர்


2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் ஆனது. இதனை இடைக்கால நிதியமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் முடிவடைந்த பிறகு, காங்கிரஸின் எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பட்ஜெட் அறிவிப்புகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. எனினும், வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் நடுத்தர குடும்பத்தினருக்கு பயனளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இதற்கிடையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரூ. 6000 வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதம் மாதம் அவர்களுக்கு ரூ. 500 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதை வைத்து அவர்கள் எப்படி கௌரவமாக வாழ்வார்கள்?

ஏற்கனவே விவசாயிகள் தரப்பில் குறைந்தப்பட்ச ஆதாரவிலை மற்றும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதை கண்டுக்கொள்ளாமல் இந்த அறிவிப்பு வெளியிட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்