ஆப்நகரம்

ஐஐடி சென்னைக்கு மத்திய அரசு நிதியளிக்கும்: அருண் ஜெட்லி

இன்று அறிவிக்கப்பட்ட 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ஐஐடி சென்னையில் மேற்கொள்ளப்படும் 5ஜி ஆராய்ச்சிக்கு மத்திய தகவல் தொடர்புத்துறை நிதியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Feb 2018, 12:42 pm
இன்று அறிவிக்கப்பட்ட 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ஐஐடி சென்னையில் மேற்கொள்ளப்படும் 5ஜி ஆராய்ச்சிக்கு மத்திய தகவல் தொடர்புத்துறை நிதியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil dept of telecom will support indigenous 5g programme of iit chennai says finance minister arun jaitley
ஐஐடி சென்னைக்கு மத்திய அரசு நிதியளிக்கும்: அருண் ஜெட்லி


நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் அறிவித்து வருகிறார். அடுத்த ஆண்டு தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் வர உள்ளதால், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி சென்னை ஐஐடியில் நடத்தப்படும் 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிக்கு மத்திய தகவல் தொடர்புத் துறை நிதியளிக்கும் என அறிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கட்டமைக்கபடும் தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்